Friday, 22 February 2019


             புரட்சிகரமான வாழ்த்துக்கள்
BSNL நிறுவனத்தை பாதுகாக்க நடைபெற்ற மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள், அதிகாரிகள்,ஓப்பந்த தொழிலாளர்கள்,நம்மோடு
சேர்ந்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட BSNL-SEWA தோழர்களுக்கும்,தார்மீக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Thursday, 31 January 2019


AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளுடன் சந்திப்பு
 AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளை 30/1/2019 அன்று சந்திந்து
பேச்சுவார்த்தை  நடத்தினார்கள்.அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக பேசினார்கள்.DOT சார்பாக 5 சதவீதம் பிட்மெண்ட் மும்மொழியப்பட்டுள்ளது.
AUAB தலைவர்கள் இதை நிராகரித்துவிட்டார்கள்.இதை ஏற்றுக்கொண்டால் 5/2/19 அன்று நடைபெறும் DIGITAL COMMISSION கூட்டத்தில் வைக்கப்படும் பின் மத்திய அமைச்சரவையின் ஓப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.AUAB  தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.மீண்டும் CMD யுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஓரிரு நாளில் மீண்டும் பேசலாமென்று
ADDITIONAL SECRETARY DOT கூறியுள்ளார்.
3/12/2018 அன்று அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கமுடியாது என்று கூறினார்.10/1/2019 அன்று  ADDITIONAL SECRETARY DOT யுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 0 சதவீதம் தான் கொடுக்கமுடியும் என்று கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


           வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம்
25/1/2019 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை கூட்டம் 29/1/2019 அன்று நடைபெற்றது. அதில் தோழர் அஸ்லம்பாஷா  BSNLEU தோழர் பழனியப்பன் NFTE தோழர் சக்திவேல் SNEA தோழர் சசிக்குமார் AIBSNLEA தோழர் அண்ணாதுரை TEPU ஆகியோர் கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   2000 நோட்டீஸ்கள் அச்சடித்து வினியோகம் செய்வது
2)   ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் பயண திட்டம் வகுப்பது
3)   கோரிக்கை FLUX  வைப்பது
4)   செலவுகளை ஈடுகட்டும் வகையில் ஊழியர்களிடம் நிதி திரட்டுவது
5)   பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது.
6)   மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்புகூட்டம் நடத்துவது அதற்கு ஊழியர்களை திரட்டுவது

Wednesday, 30 January 2019


                   வாழ்த்துகிறோம்
இன்று பணியிலிருந்து ஓய்வுபெறும் தோழர்கள்.தோழரியர்கள் அனைவரும் தங்களுடைய ஓய்வுகாலத்தை நீண்ட ஆயளூடனும் மன நிம்மதியுடன் வாழவேண்டுமென வாழ்த்துகிறோம்.

Wednesday, 16 January 2019


              மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இன்று (16/1/2019) காலை CMD யுடன் AUAB தலைவர்கள் சந்தித்து ஊதிய திருத்தம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை ஏற்கனவே DOT ADDL SECRETARY சொன்னதின் அடிப்படையில் நடைபெற்றது.
அதில் AUAB தலைவர்கள் 15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தினார்கள்.CMD அவர்களும் அதை ஆமோதித்தார்.பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதம் அறிவிக்ககூடிய வாய்ப்புள்ளதால் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் 15 சதவீத பிட்மெண்ட் கொடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்து விட்டனர்.

Thursday, 10 January 2019


          வாழ்த்துகிறோம் | பாராட்டுகிறோம்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து  நடைபெற்ற
வேலைநிறுத்தத்தில் அனைத்து தோழர்கள்.தோழியர்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, 30 December 2018


அனைவருக்கும் புத்தாண்டு                         2019
                     நல்வாழ்த்துக்கள்

       BSNL ஊழியர் சங்கம் திருச்சி தொலைதொடர்பு மாவட்டம்

Tuesday, 25 December 2018


வெகுண்டெழுந்து  போராடுவோம்
ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் பொதுவேலைநிறுத்தம்
மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,விவாசாயிகள்
விரோத,பொதுதுறைக்களூக்கு எதிரான,தனியார்மய ஆதரவு கொள்கைகளை எதிர்த்து நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் 10 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்,பல நூறுக்கும் மேற்பட்ட துறைவாரி தொழிற்சங்கங்களும்
கலந்து கொள்ளவுள்ளன
இது புதிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தப்பட்டு நடக்கும் 18 வது பொதுவேலைநிறுத்தம் ஏற்கனவே நடைபெற்ற 17 வேலை நிறுத்தங்களிலும்
BSNL ஊழியர் சங்கம் என்ற அடிப்படையிலும்,K G BOSE அணியினர் என்ற அடிப்படையிலும் கலந்து கொண்டுள்ளோம்.
வருகிற ஜனவரி 8,9 நடைபெறுகிற இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் BSNL லில் BSNLEU,NFTE-BSNL,TEPU,BSNLMS ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வது என்று நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பங்கேற்போம்| வெற்றி பெறச்செய்வோம்
BSNL EMPLOYEES UNION TRICHY SSA

Sunday, 23 December 2018


வெற்றிகரமாக நடந்து முடிந்த அகில இந்தியமாநாடு
நமது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17 முதல் 20 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்றது.முதல் நாள் கருத்தரங்கம் மற்றும் பொதுஅரங்கில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற பொருளாய்வுகுழுவில் சார்பாளர்கள்,பார்வையாளர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அறிக்கை மீது விவாதம்,நம்முடைய பிரச்சினைகளைப்பற்றி விவாதித்து 12 தீர்மானங்கள்,சங்க சட்டவிதிகளில் திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக        தோழர் அனிமேஷ்மித்ரா
பொதுசெயலராக           அபிமன்யூ
துணைபொதுசெயலராக  தோழர் ஸ்வபன்சக்கரவர்த்தி
பொருளாளராக                  கோகுல் போரா
உதவி பொதுசெயலராக         செல்லப்பா
உள்பட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Sunday, 9 December 2018

JTO தேர்வு காலியிடங்கள்
ஜனவரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

OC/MBC - 176
SC           -     56
ST           -     55   மொத்தம்---287
இலாகா அமைச்சருடன் அனைத்து சங்க கூட்டமைப்பு சந்திப்பு

 03/12/2018  நமது இலாக்கா அமைச்சருடன் அனைத்து  சங்க  கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுநமது கோரிக்கைகளில்  கீழ்க்கண்ட  முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சரவை  ஒப்புதல் விரைவில்  பெறப்படும்இதற்கான  பணியை  செய்து  முடிக்க  DOTயின்  மூத்த  அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக   நியமிக்கப்படுவார்.

ஓய்வூதிய மாற்றம்

ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் இனி  யாதொரு சம்பந்தமுமில்லை...ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.

ஓய்வூதியப்பங்களிப்பு

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  என்ற மத்திய அரசு உத்திரவு BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.   நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.

புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..

BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

3வது ஊதிய மாற்றம்..

BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட…BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று நடைபெறவிருந்த  காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் வழிகாட்டுதலின் படி அனைத்து சங்க கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திட DOT சார்பில் அதிகாரியை நியமித்திடு கூட்டமைப்பு - DOT செயலருக்கு கடிதம்...


வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அனைத்து சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை தொடர்ந்து விவாதிக்க DOT தரப்பிலிருந்து ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அனைத்து சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெவித்திருந்தார். DOT வெளியிட்ட மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சரின் வழிகாட்டுதலின் படி அதிகாரி ஒருவரை நியமிக்க  அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக கூட்டமையின் தலைவர் சந்தேஸ்வர் சிங் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் தோழர் அபிமன்யு அவர்களும் கூட்டாக கையெழுத்திட்டு திருமதி அருணா சுந்தரராஜன் , DOT செயலர் அவர்களுக்கு இன்று 06.12.2018 கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடித்தத்தில் அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி DOT யின் கூடுதல் செயலராக இருப்பின் DOTயின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் அவ்வதிகாரியை நியமித்தால் மட்டுமே தொடர்ந்து விவாதித்து அமைச்சரின் உறுதிமொழிகள் நிறைவேறுவது என்பது நனவாகும் என்றும் ஊழியர் நலனை முன்னிட்டும் தொழில் அமைதியை காக்கவும் அனைத்து சங்க கூட்டமைப்புடன் விவாதிக்க அவரை விரைவாக நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடிதத்தின் நகல் DOTயின் கூடுதல் செயலர் அன்சு பிரகாஷ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு ஊதிய தாமதத்தை கண்டித்து இயக்கங்கள்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர்,நவம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கவில்லை.ஆகவே கீழ்கண்ட இயகக்ங்கள் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள் அறிவித்துள்ளன.இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் கலநது கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
11/12/2018-------------------------கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்
14/12/2018------------------------மாலை நேர தர்ணா
BSNLEU-------------------------TNTCWU--------------------மாவட்ட சங்கங்கள் திருச்சி

Monday, 3 December 2018


               நன்றி|  நன்றி  நன்றி
டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திகொள்ள நினைத்த ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்ததொழிலாளர்கள்.ஆதரவு கொடுக்க நினைத்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த அறிவிப்பும் வரை வேலை நிறுத்தபோராட்டம் ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

ALL UNIONS AND ASSOCIATION OF BSNL TRICHY SSA

Saturday, 24 November 2018


AUAB  சார்பாக வேலை நிறுத்த கூட்டங்கள்

26/11/18—மதியம் 1.30 மணி PGM அலுவலக் ம் திருச்சி
27/11/18-09.30 மணி திருவரங்கம்,மெயின்கார்டுகேட்
மாலை 4.00 மணி சாலை ரோடு உறையுர்
28/11/18-09.30 மணி BHEL TOWN SHIP EXCHANGE
29/11/18—கரூர்,குளித்தலை
30/11/18—பெரம்பலூர்
1/12/18—PGM அலுவலகம் திருச்சி
அனைத்து ஊழியர்களூம்,அதிகாரிகளூம் பங்கேற்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.