Wednesday 13 December 2017

                                        நன்றி         நன்றி      நன்றி

நமது வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இரண்டு நாள்
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள்,
அதிகாரிகள், ஓப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நமது
நெஞ்சார்ந்த நன்றியினையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

BSNLEU DISTRICT UNION AND 
ALL UN IONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Friday 8 December 2017

வெற்றிகரமாக்குவோம் வேலைநிறுத்தத்தை

டிசம்பர் 12,13 இரண்டுநாட்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளூக்காக‌
1.நமது உரிமைகளை பாதுகாக்ககூடிய ஊதியதிருத்தத்திற்காக‌
2.நமது நிறுவனத்தை பாதுகாக்ககூடியதுணை டவர் கம்பெனியை உருவாக்காதே
இது நமது வாழ்வா சாவா போராட்டம் ஆகவே அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம்
பங்கேற்போம் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

Thursday 7 December 2017

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING




 
 
 
 
 

 
 
 


Wednesday 6 December 2017

அனைத்து சங்கங்களின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினர்
மாண்புமிகு திரு N   சிவா  MP அவர்களீடம் நம்து கோரிக்கை
மனு 6/12/17 அன்று அளிக்கப்பட்டது.

  

 
 
 
 
 
 

Thursday 30 November 2017

நாடாளூமன்ற உறுப்பினரை சந்தித்து மகஜர் அளிக்கப்பட்டது

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா) திரு T.ரத்தினவேல் MP
அவர்களிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக 29/11/2017 அன்று நமது
கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டது

 

Friday 24 November 2017

                                         நன்றி  நன்றி   நன்றி

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து
நாடு முழுவதும் மனிதசங்கிலி இயக்கம் நடத்த வேண்டுமென்று
கூட்டுபோராட்டக்குழு அறிவித்ததின் அடிப்படையில் திருச்சியில்
23-11-2017 அன்று PGM அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதசங்கிலி
இயக்கத்தில் சுமார் 500 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஓப்பந்த‌
தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் ALL UNIONS AND ASSOCIATIONS சார்பாக‌
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் வருகிற டிசம்பர் 12,13 வேலைநிறுத்ததிலும் முழுமையாக‌
கலந்து கொண்டு வெற்றிபெறசெய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday 19 November 2017

                     வேலைநிறுத்த கூட்டம் நமது மாவட்டத்தில்

அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்கண்ட இடங்களில் 
கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது.அனைத்து சங்க‌
தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL---BSNLMS
BSNLOA----BSNLATM----TEPU-----AIBSNLOA----BEABSNL

17/11/2017-----AUTO EXCHANGE   (நடைபெற்றுவிட்டது)

18/11/2017----D-TAX BUILDING   (நடைபெற்றுவிட்டது)

20/11/2017----PUDUKOTTAI

22/11/2017----KARUR

23/11/2017-----TRICHY PGM OFFICE  HUMANCHAIN மனிதசங்கலி இயக்கம்

24/11/2017----PERAMBALUR

25/11/2017----ARIYALUR

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING

Wednesday 15 November 2017

                                              நன்றி  நன்றி நன்றி

நேற்று நடைபெற்ற தேசியகவுன்சில் கூட்டத்தில் ஊழியர்களுக்கு
தற்போது வழங்கி வருகின்ற ரூ 200 இலவச செல் கால்களுக்கு பதில்
தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள PLANT 429 திட்டத்தை
ஊழியர்களுக்கு வழங்கவேண்டுமென்று நமது பொதுசெயலர்
கோரிக்கைவைத்தார். கவுன்சிலின் தலைவர் DIRECTOR (HR) அதை
ஏற்றுக்கொண்டார். விரைவில் உத்தரவு வெளியாகும்.

இதன் மூலம் மூன்று மாதத்திற்கு எந்த NETWORK க்கும் UNLIMITED
பேசிக்கொள்ளலாம்.தினமும் 1 GB        DATA பயன்படுத்திக்கொள்ளலாம்

மத்தியசஙகத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday 12 November 2017

கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்

மூன்று நாட்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்ட தர்ணா
புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தின்போது சிறைநிரப்பும் போராட்டமும்
அதற்கு அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது
என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Friday 3 November 2017

                                       வாழ்த்தி வழி அனுப்புகிறோம்

மத்திய அரசின் தொழிலாளர்விரோத கொள்கைகளை எதிர்த்து
11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து 12 முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்து பல்வேறு இயக்கங்களுக்கு முடிவு செய்து அது
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக வருகிற‌
9,10,11 மூன்று நாட்கள் புதுடெல்லியில் பல லட்சம் பேர் கலந்து
கொள்ளக்கூடிய தர்ணா நடைபெறவுள்ளது. அதில் BSNLEU சார்பாக‌
நாடு முழுவதும் பல நூறு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்
திலிருந்து 150 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நமது மாவட்டத்திலிருந்து BSNLEU   சார்பாக 8 பேரும்  AIBDPA சார்பாக 2
பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்
அவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்

Monday 23 October 2017

தேசிய வொர்க்ஷாப் ஹைதராபாத்தில்-22/1/2017

22/10/17 அன்று ஹைதராபாத்தில் மத்திய சங்கங்கள் பங்கேற்ற‌
வொர்க்ஷாப் நடைபெற்றது அதில் INTUC,AITUC,HMS,CITU,LPF,JAC
BANGALORE,JAC HYDERABAD போன்ற சங்கங்கள் கலந்து கொண்டன.
நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்து கொண்டார்
பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி விவாதித்தாலும் முக்கியமாக‌
ஊதியதிருத்தம்,பொதுதுறை நிறுவனங்களை பங்கு விற்பனை,
தனியார்மயப்படுத்துதல், ஆகியவற்றைபற்றி விவாதித்து இறுதியாக‌
கீழ்கண்ட முடிவுகளை எடுக்கப்பட்டது.

1)ஊதியதிருத்தம் 5 ஆண்டுக்கு ஒருமுறை செய்ய முயற்சி எடுப்ப;து
2)பொதுதுறை நிறுவனங்களை பங்கு விற்பனை,
தனியார்மயப்படுத்துதலை எதிர்த்து போராடுவது.
3)நிரந்தர வேலைகளீல் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை தடுப்பது
4)ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய திருத்தம் செய்வது

இதற்காக அனைவரும் ஓன்றுபட்டு போராடுவது
கூட்டு பேச்சுவார்த்தைகுழு அமைத்திடுக‌

PLI சம்மந்தமாக ஏற்கனவே நாம் 13/10/17 அன்று நாடுமுழுவதும்
ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.அதை தொடர்ந்து நிர்வாகம் இரண்டு
அங்கீகாரம் பெற்ற சங்கங்களையும் அழைத்து பேசி இது சம்மந்தமாக‌
PLI  கமிட்டியில் பேசி முடிவு வரலாம் என்று சொல்லப்பட்டது.ஆகவே
23/10/17 அன்று நமது பொதுசெயலர் GM SR அவர்களை சந்தித்து
கூட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.

விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் கருத்தரங்கம்

நமது மாநிலத்தின் விரிவடைந்த செயற்குழு கிளைசெயலர்களும்
பங்கேற்ற கூட்டம் மதுரையில் 21/10/17 அன்று நடைபெற்றது. அதில்
வர இருக்ககூடிய அனைத்து சங்க இயக்கங்களைப்பற்றி நமது
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கோரிக்கை சம்மந்தமாக‌
விளக்கி உரையாற்றினார்.நம்மை தயார்படுத்த வேண்டும் நூறு சதவீதம்
வெற்றிபெற செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மதியம் ரஷ்யாவில் நடைபெற்ற பாசிச ஆட்சியை கடுமையான‌
போராட்டத்தின் மூலமாக விரட்டியடித்து உலகத்தில் முதன்முதலில்
தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அமைத்த தோடு மற்றநாடுகளில்
சுதந்திரத்திற்காக போராடுபவர்களூக்கு உத்வேகம் அளித்து அதன் மூலம்
ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் CITU வின் அகில இந்திய துணை தலைவர்
தோழர் A K பத்மனாபன் சிறப்புரையாற்றினார்.நமது பொதுசெயலர் அவர்களும்
உரையாற்றினார். 

Sunday 22 October 2017

வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது

1.3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக‌
2.துணைடவர் கம்பெனியை உருவாக்காதே
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வதன்று
அனைத்து சங்கங்களின் சார்பாக முடிவு செய்யப்பட்டு அதற்கான‌
நோட்டீஸ்  11/10/2017 அன்று நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Monday 16 October 2017

காத்திருப்பு போராட்டம்



 

 
 
 

காத்திருப்பு போராட்டம் வெற்றி

நாம் எற்கனவே நமது ஒப்பந்த தொழிலாளர்களின் 9 கோரிக்கைகளை முன்வைத்து 7-10-2௦17 அன்று உண்ணாவிரதம் நடத்தினோம். அதன்பின் சில முன்னேற்றங்கல் வந்தாலும் முழுவதுமாக பிரச்சினைகள் தீரவில்லை, ஆகவே அடுத்தகட்டமாக 12-10-2௦17 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலைந்து கொண்டனர்.
தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF) துவக்கிவைத்தார், அதன்பின் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் PGM, DGM(A), DGM-CFA-I, AGM-SALES, AGM-CM நிர்வாகத்தரப்பிலும், நமது சங்கத்திலிருந்து தோழர் T.தேவராஜ் DP, தோழர் S.அஸ்லாம்பாஷா DS, தோழர் Gசுந்தராஜ் ADS, தோழர் R.கோபி DT, தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF)  கலந்துகொண்டனர். கிழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன ,
1) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இன்றைக்குள் வழங்கப்படும்,
2) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை சனிகிழமைக்குள்        வழங்கப்படும்,
3) 20-05-2009 முதல் கிடைக்கவேண்டிய நிலுவை தொகை பட்டுவாடா சம்பந்தமாக ஸ்டே விலக்கு செய்வதற்கு மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்படும்,
4) போனஸ் பட்டுவாடாவிற்கு அனைத்து ஒப்பந்தகாரரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. திபாவளிக்குள் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,
5) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 15 ஊதியம் உடனடியாக வழங்கப்படும்,
6) பணி நேரம் 6 மணி நேரத்திலிருந்து 8 நேரமாக உயர்த்துவது, திறனுக்கேற்ற ஊதியம் போன்றவை தேவைக்கேற்றபடி முடிவு செய்யும்,
7) ஆளில்லா தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கேட்டோம், அந்த லிஸ்ட் கொடுத்தல் பரிசிலித்து முடிவு செய்யப்படும்,
8) குளித்தலை, முசிறி, கரூர் பகுதியில் MAN POWER டெண்டர் அமுல்படுத்துவது சம்பந்தமாக பரிசிலனை செய்யப்படும்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும் இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday 11 October 2017

                                           PLI ஐ கேட்டு ஆர்ப்பாட்டம்

இந்த வருடம் PLI வழங்கவேண்டுமென்று நமது பொதுசெயலர்
CMD க்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார்.பலமுறை நேரில் சந்தித்து
பேசியுள்ளார். ஆனாலும் நிர்வாகம் BSNL ன் நிதிநிலையை காரணம்காட்டி
மறுக்கின்றது.ஆகவே அனைத்து சங்கங்களும் இணைந்து போராடுவோம்
என்று அனைத்து சங்க பொதுசெயலர்களூக்கும் 7/10/17 அன்று கடிதம்
எழுதியுள்ளார்.ஆனால் அதில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால்
13/10/2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து
சஙகங்களூம் ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

13/10/2017- அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்

Sunday 8 October 2017

PLI க்காக ஓன்று பட்ட போராட்டத்திற்கு அழைப்பு

PLI சம்மந்தமாக ஏற்கனவே 2 முறை நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது
ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆகவே ஒரு ஒன்று பட்ட‌
போராட்டம் நடத்தி நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தினால்தான் நாம் PLI
பெறமுடியம்.எனவே ஒன்று பட்டு போராடுவதற்கு வருமாறு நம்முடைய‌
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

Friday 6 October 2017

PLI வழங்ககோரி DIRECTOR HR&FINANCE க்கு மத்தியசங்கம் கடிதம்

இந்த ஆண்டுக்கான PLI வழங்க வேண்டுமென்று பொதுசெயலர்
ஏற்கனவே 14/9/17 அன்று கடிதம் எழுதியிருந்தார்.தற்போது 5/10/17
மீண்டும் அதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்

Thursday 5 October 2017

வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்

4/10/17 அன்று புதுடெல்லியில் அனைத்துசங்க கூட்டம் நடைபெற்றது.
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO,AIGETOA,SEWABSNL,BSNLMS,
ATM,TOABSNL ஆகியசஙகங்களின் பொதுசெயலர்கள் கலந்து
கொண்டனர்,
ஊதியதிருத்தம் மற்றும் துணைடவர் கம்பெனி உருவாக்குவது
சம்மந்தமாக விரிவான விவாதம் நடைபெற்று கீழ்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டன,

1) இந்த அமைப்பு இனி ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அதாவது
BSNL ன் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் என்ற‌
பதாகையின் கீழ்செயல்படும்
2)இனி நிர்வாகத்திற்கு,அரசாங்கத்திற்கு கொடுக்கப்ப‌டும் கடிதஙகங்களீல்
அனைத்து பொதுசெயலர்களும் கையெழுத்திடுவார்கள்.
3)3 வது ஊதியதிருத்தம் 1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும்,2வது
ஊதியதிருத்தத்தில் நிலுவையிலுள்ள நேரடி நியமன ஊழியர்களூக்கு
பணிஓய்வு பலன்களை வழங்கவேண்டும்
4)16/10/17 அன்று கார்ப்பரேட் அலுவலகம்,மாநில தலைமையகம்,மாவட்ட‌
தலைமையகஙகளில் ஆர்ப்பாட்டம்
5)16/11/17 மேற்சொன்ன இடஙகளில் மனித சஙகலி போராட்டம்
6) நாடாளூமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது
7)டிசம்பர் 12,13 தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தம்
8)பிரச்சினை தீரவில்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எப்போது என்று முடிவு செய்யப்படும்
9)அடுத்த கூட்டம் 23/10/17 அன்று நடைபெறும்

Wednesday 27 September 2017

OVERPAYMENT RECOVERY பிரச்சினை

OVERPAYMENT RECOVERY பிரச்சினை சம்மந்தமாக 4/9/17 மற்றும்
19/9/17 கார்ப்பரேட் அலுவலக உத்தரவுபடியும்
DOP & T 6/2/2014 தேதி  உத்தரவுக்கு முன் உள்ள CASE க‌ளை
CGM அவர்கள் தீர்த்துவைப்பது. 6/12/14 க்குபின் பிடித்தம்
செய்யப்பட்டிருந்தால் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு
அனுப்ப வேண்டும். இதை மாநில செயலர்களும், மாவட்ட‌
செயலர்களும் கண்காணிக்க வேண்டுமென்று மத்திய‌
சங்கம்கூறியுள்ளது.

கேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்

கேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 26/9/17 அன்று நடைபெற்றது.
அதில் கீழ்கண்ட பெயர்கள் மாற்றம் செய்வது என்று முடிவு
செய்யப்பட்டது.
JAMADAR, TELEGRPHOVERSEER,TELEGRAPHMAN,LINEMAN,CARPENTER
MASON,PLUMBER,PAINTER,AC MECHANIC,SEWERMAN,WELDER,TECHNICIAN(TF)
WIREMAN,PUMPOPERATOR,AC OPERATOR ,OPERATOR(E &M)
போன்ற கேடர்களூக்கு----JOINT TELECOM TECHNICIAN என்ற பெயர்
மாற்றம் செய்யப்படுகிறது.

TOA 4 கேடர்களூக்கும் -----JUNIOR OFFICE ASSOCIATE என்று பெயர்
மாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி  ! மாபெரும் வெற்றி

ஈரோட்டில் நஷ்டம் எனற காரணத்தை காட்டி 10 வருடங்களூக்கும்
மேலாக பணீயாற்றியவர்களை 1/9/2017 முதல் பணிநீக்கம் செய்தது
நமது மாவட்டசங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித‌
முன்னேற்றமும் இல்லை.பல கட்ட போராட்டமும் நடத்திவிட்டார்கள்
நிர்வாகம் அசைய மறுத்தது.ஆகவே வேறுவழியின்றி இரண்டு மாநில‌
சங்கங்கள் அறைகூவல்விட்டதின் அடிப்படையில் தமிழ்மாநில‌
முழுவதிலிருமிருந்து 800 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அத்தனைபேரையும் மீண்டும்
பணீக்கு எடுத்துக் கொள்வது என்ற உடன்பாடு ஏற்பட்டது.
வேலுரில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
சென்னை CGM அலுவலகத்தில் 11 பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
தற்போது ஈரோட்டில் அதை செய்து முடித்துள்ளோம்.
ஓப்பந்த தொழிலாளர்கள் ஓன்றும் அனாதைகளல்ல அவர்க்ளுக்கு BSNL ஊழியர்
சங்கமும் ,ஓப்பந்த தொழிலாளர் சங்கமும் பாதுகாவலனாக இருக்கும் என்பதை
மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளோம்.
போரடாமல் பெற்றதில்லை! போராடி நாம் தோற்றதில்லை! இறுதி வெற்றி நம‌தே!

Monday 25 September 2017

                     அநீதி கண்டு வெகுண்டெழுந்து  வாருங்கள்

ஈரோட்டில் 33 ஓப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை
கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்ககோரியும்
26/9/2017 அன்று மாநிலந்தழுவிய உண்ணாவிரத பொராட்டம்
நடைபெறவுள்ளது.பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள‌
வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Saturday 23 September 2017

                            அனைவரும் ஒன்றிணைகிறார்கள்

ஊதியதிருத்தம் கிடைக்கப்பெறாத பொதுதுறை நிறுவனங்களின்
சங்கங்கள் INTUC,AITUC,HMS,CITU உள்பட ஒன்றினைந்து அடுத்த‌
கட்ட போராட்டம் நடத்துவதற்கு ஹைதராபாத்தில் வருகிற 22/10/2017
கூடி திட்டமிடவுள்ளன. அதில் நமது சங்கமும் கலந்து கொள்ளவுள்ளது.

                                              மீண்டும் முயற்சி

3வது ஊதிய திருத்தம் சம்மந்தமாக அமைச்சரவை முடிவு, DPE
உத்தரவு போன்றவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு மட்டும்தான்
ஊதியதிருத்தம் நஷ்டம் அடைந்திருக்கிற நிறுவனத்திற்கு ஊதியதிருத்தம்
இல்லை .அதாவது AFFORDABILITY CLAUSE எடுக்காதவரை BSNL க்கு ஊதிய‌
திருத்தம் கிடையாது.ஆகவே இதற்காக நாம் ஒரு நாள் வேலைநிறுத்தம்
செய்தோம்.அதன்பின் CMDயுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
மீண்டும் ஒரு கமிட்டி போட்டு அதன் மூலம் DOT க்கு அனுப்பபடும்
என்று கூறினார்.அதன்படி தற்போது 15% FITMENT கொடுக்கவேண்டுமென்று
MANAGEMENT COMMITTEE ஒப்புதல் கொடுத்துள்ளது.அத்ன்பின் BOARD
ஓப்புதல் பெற்று DOT க்கு அனுப்பபடும் .நாம் ஒன்றை தெளிவாக புரிந்து
கொள்ள வேண்டும்.இதன் மூலம் தானாக ஊதியதிருத்தம் கிடைத்துவிடும்
என்று கருத வேண்டாம். ஒரு கடுமையான போராட்டம் நடத்தினாலொழிய‌
ஊதியதிருத்தம் பெறமுடியாது.
ஆகவே அனைத்து சங்கங்களோடு பேசுவதற்கு கூட்டம் 26/9/17 அன்று
நடைபெறுகிறது.

தடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு

நாடுமுழுவதும் CUSTOMER SERVICE CENTRE களை FRANCHISE
களுக்கு விடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து டெண்டரும் 
கோரியிருந்தது .மத்திய சங்கம் இதை உடனடியாக கைவிட‌
வேண்டுமென்று என்றும் கண்டனம் தெரிவித்ததோடு ,க‌டிதமும்
எழுதியிருந்தது. அதன்பின் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது
அதில் கீழ்கண்ட உடன்படிக்கை எற்பட்டது.
1)நாடு முழுவதும் டெண்டர் விட்டது நிறுத்தி வைக்கப்படுகிறது.
2)ஒவ்வொரு மண்டலத்திலும் 3 CSC பரிட்சார்த்த அடிப்படையில் விடுவது
3) நாடு முழுவதும் உள்ள CSC களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு
பேர்,அவர்களுடைய வயது  என்ன என்ற விபரஙகளை திரட்ட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது.

Thursday 14 September 2017

14/9/17 மத்திய சங்கம் DOT க்கு கடிதம்

துணை டவர் கம்பெனி உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து
DOT செகரட்டரிக்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
                               நிர்வாகம் தூக்கத்திலிருந்து விழித்தது

சென்னை CGM அலுவகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வதென்று
முடிவு செய்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது .இந்த சூழ்நிலையில்
நிர்வாகம் மாநில சங்கங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதோடு மாவட்ட நிர்வாகங்களூக்கு பல்வேறு கடிதங்கள் எழுதி வருகிறது.நாமும்
நிலைமையை கண்காணித்து வருகிறோம்.19,20,21 மூன்று நாட்கள் சென்னை 
உண்ணாவிரதத்திற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன்.

Tuesday 12 September 2017

                              சென்னை போராட்டம் ஓத்திவைப்பு

நிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக சென்னையில் நடைபெற‌
இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வார காலத்திற்கு தள்ளி
வைப்பு. 19/9/17 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
சென்னை செல்ல தயாராக இருப்போம்.

Thursday 7 September 2017

                                                       வெட்கக்கேடு

மத்திய BJP மோடி அரசாங்கம்  கார்ப்பரேட்களுக்கு 
சலுகைகள்,உதவிகள் செய்துவருவது நம் அனைவருக்கும்
தெரியம். ஆனால் தற்போது செய்திருப்பது அப்பட்டமாக‌
தெரிகிறது.
தபால் அலுவலகஙகளில் RELIANCE JIO சிம் விற்பதற்கு
உடன்பாடு போடப்பட்டு. உத்திரபபிரதேச மாநிலம்
லக்னோவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான BSNL  சிம்மை விற்பதற்கு இதுவரை
முயற்சி செய்யவில்லை.கார்ப்பரேட் சிம்மை விற்பதற்கு
அனுமதி கொடுத்துள்ளதை நாம் வெட்கப்பட வேண்டிய விஷ்யம்
                                  பூனைகுட்டி வெளியில் வந்தது

நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் பணியில்
தனியாரையும் ,ப்ன்னாட்டு நிறுவனங்களையும் மோடி
அரசாங்கம் அனுமதி கொடுத்துளளதற்கு நாட்டின் பற்று
உள்ள அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு ,இறையாண்மைக்கு ஆபத்து என்று
தெரிந்துருந்தும் BJP அரசாங்கம் இதை செய்கிறது. தற்போதுதான்
தெரிகிறது இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கொள்ளையடிக்க‌
கொண்டுவரப்பட்டுளளது.
கொளதம் அதானி சுவீடன் கம்பெனியுடன் உடன்பாடு போட்டு
ஃபட்டர் ஜெட் விமானம் தயாரிக்கவுள்ளார்.

அரசு நிறுவனஙகள் ,பொதுதுறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்துவது
கார்ப்பரேட் நலன்கருதிதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

                                      மீண்டும் பட்டை நாமம்

BSNL  ஊழியர்களுக்கு 15% பிட்மமெண்ட் அடிப்படையில்
ஊதியதிருத்தம் செய்ய ஆதரவாக இருந்தாலும் DOT
தயாராக இல்லை

சமீபத்தில் நம்பதகுந்த வட்டாரங்களீலிருந்து கிடைத்துள்ள‌
செய்தி என்னவென்றால் BSNL நிதி நிலைமை சரியில்லை ஆகவே
BSNL ஊழியர்களூக்கு ஊதிய திருத்தம் செய்ய வேண்டாம் என்று
அமைச்சரிடம் கூறியுள்ளது. அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
DOT ஆதரவாக உள்ளது அமைச்சர் ஆதரவாக உள்ளார் என்று நம்மிடையே
சில தலைவர்கள் கூறினார்கள்.BSNL ஊழியர் சங்கம் திரும்ப திரும்ப சொல்லி
வருகிறது இந்த அரசாங்கத்தின் குணத்தை புரிந்து கொண்டு ஒன்று பட்டு
போராடினால்தான் முடியும் நாம் ஊதிய்ருத்தம் பெற முடியும் என்பதை
தற்போதாவது புரிந்து கொண்டு ஒன்று பட்ட போராட்டத்திற்கு தயாராவொம்

அதற்கு சமிபத்திய உதாரணம் நிலக்கர் ஊழியர்கள் போராட்டம்.அங்கு
BMS உள்பட ஒன்றுபட்டு நின்று போராடி 20 சதவீதம் 5 ஆண்டு ஒப்பந்தம்
என்பதை நிறை வேற்றவுள்ளனர்.இத்தனைக்கும் DPE கூறியது 15% பத்து
ஆண்டு என்பதை ஒன்றுபட்டு முறியடித்துள்ளனர்.
தேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL   ம்ற்றும்  ELECTRICAL
LICE தேர்வுகளை உடனடியாக நடத்தவும் மத்தியசஙகம் கோரிக்கை

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 

கேடர்பெயர் மாற்ற கூட்டத்தில் 
DRAFTS MAN   கேடர்  JE CIVIL என்றும்
CHARGEMAN    கேடர்   JE TF    என்றும் பெயர் மாற்ற‌
ஒத்துக்கொண்டுள்ளது.
மற்ற 15 கேடர்கள் சம்மந்தமாக 26/9/17 அடுத்த கூட்டத்தில்
தொடர்ந்து விவாதிப்பது.
                          தயாராவோம் சென்னையை நோக்கி

அன்பார்ந்த தோழர்களே ஓப்பந்த தொழிலாளர்களூக்கு
பிரதிமாதம் 7ந் தேதி ஊதியம் வழங்க வேண்டுமென்று
கார்ப்பரேட் அலுவலக உத்தரவு இருந்தும் அதை நடைமுறை
படுத்துவதில்லை,19/1/17 முதல் அரியர்ஸ் இன்னும் வழஙகவில்லை
இது போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை CGM
அலுவலத்தில் 12/9/17,13/9/17,14/9/17 ஆகிய மூன்று நாட்கள் தொடர்
உண்ணாவிரதம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,
நமது மாவட்டத்திலிருந்து 14/9/17 அன்று கலந்து கொள்ளவேண்டும்
ஆகவே நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட ,பிரச்சினைகள்
தீர்வதற்கு சென்னை செல்ல தயாராவோம்

Tuesday 5 September 2017

                                              வாழ்த்துக்கள்

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக‌
JAO தேர்வு முடிவுகளை மறு பரிசிலனை செய்ய வேண்டும்
என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் திருத்தப்பட்ட‌
RESULT வெளீயாகியுள்ளது அதில் நமது ரூரல் நார்த் கிளையின்
தலைவரும் மணச்சநல்லூரில்  JE  ஆக பணிபுரிவருமான 
தோழர் S. கண்ணன் JAO தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நமது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்
                                   அஞ்சலி செலுத்துகிறோம்

2/9/17 அன்று பணீக்கு செல்லும்போது புதிதாக நேரடி நியமனத்தில்
பணீக்கு வந்த தோழர் ஜீவா JE அவர்களும் சுமார் 20 ஆண்டுகளாக‌
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓப்பந்த ஊழியர் தோழர் கஜேந்திரன்
அவர்களூம் சாலைவிபத்தில் அகால மரமணமடைந்துள்ளனர்,
அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday 31 August 2017

உததரவு வெளியாகியது

இரவு நேரம் இலவசமாக ( இரவு 9.00 மணியிலிருந்து காலை 7.00 மணி வரை)
பேசும் வசதி வாடிக்கையாளர்களூக்கு அறிமுகப்ப்டுத்தப்பட்டது. இதை BSNL ல்
பணிபுரியும் ஊழியர்களுக்கும்,ஓய்வு பெற்றவர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென்று நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பேசி ந்தது.அதன்டிப்படையில்ஓய்வுபெற்ற்வர்களூக்குஉததரவிடப்பட்டது.பணியாற்றும் ஊழியர்களூக்குஅமுல்படுத்த வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தி வந்தோம் அதனடிப்படையில்30/8/2017 அன்று BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நமது மத்திய சங்கத்திற்கு நம்முடைய மனமார்ந்த நன்றியையும்,பாராட்டுதல்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
SC/ST ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பது BSNL ஊழியர் சங்கம் மட்டுமே

SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் DOP &T உத்தரவை அதையொட்டிய‌
DOT -30/11/92 உத்தரவை அமுல்படுத்த வேண்டுமென்று BSNL ஊழியர் சங்கம்
நிர்வாகத்திடம் கடிதம் மூலமும் ,நேரடியாகவும் வலியுறுத்திவந்தது.
29/12/2014 மற்றும் 28/7/2016 ஆகிய தேதிகளில் ஒரு சில சலுகைகள் கொடுக்கப்
பட்டது. ஆனால்DOT -30/11/92 உத்தரவை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று 
நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது அதன் தொடர்ச்சியாக நிர்வாகம்
28/8/2017 அன்று உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது  இது 28/7/2016 முதல் அமுலாகும்

தொடர்ந்து முயற்சி எடுத்து உத்தரவை பெற்று தந்த மத்தியசங்கத்திற்கு நம்முடைய‌
நன்றியையும் ,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday 30 August 2017

BSNL ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ரொக்க தொகை அதிகரிப்பு

BSNL ஊழியர்களுக்கு சோப்பு,டவல்,டம்ளர்,பேனா,டைரி க்காக‌
ரூ 500/- வழங்கப்பட்டு வந்தது அதை உயர்த்திதர வேண்டும்
என்று மாநில கவுன்சிலில் பேசப்பட்டது அதன்படி அந்த‌
தொகை உயர்த்தப்பட்டு ரூ 750/- வருகிற ஜனவரி 2018 முதல்
வழங்கப்படும்

Tuesday 29 August 2017

BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்

SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் அவர்களூக்கு உரிய‌
சலுகைகளை கொடுக்ககூடிய DOP & T  மற்றும்  DOT 30/11/1992
உத்தரவுகளை கறாராக அமுல்படுத்த வேண்டுமென்று  
BSNL ஊழியர்சங்கம் அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து
வலியுறுத்திவந்தது . அதன்படி 29/12/2014 மற்றும் 28/7/2016 தேதியிட்ட‌
உத்தரவுகளில் ஒரு சில சலுகைகள் அறிவித்தது. ஆனாலும் 
BSNL ஊழியர்சங்கம் முழுமையாக DOT 30/11/1992 உததரவை
அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது 
அதன்படி 28/8/2017 அன்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி
பதவி உயர்வு தேர்வில் SC ஊழியர்கள் 20 மதிப்பெண்களும்  /ST ஊழியர்கள்
15 மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
இந்த உத்தரவு 28/7/2016 முதல் அமுலுக்குவருகிறது.இந்த தேதிக்குப்பின்
தேர்வு எழுதிய அனைத்து SC,ST ஊழியர்களுக்கு பொருந்தும்.

BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்,SC/ST ஊழியர்களின்
உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரே சங்கம் BSNL ஊழியர்சங்கம்தான்.
25/8/17 தனிநபர் அந்தரங்கம் மக்களின் அடிப்படை உரிமை
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


25/8/2017 நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

DIRECTOR (HR) அவர்கள் ந்ம்முடைய சங்கத்தோடு பேசுவதற்கு
செப்டம்பர் முதல் வாரத்தில் வருமாறு நம்முடைய பொது
செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிர்வாகத்தை கண்டிக்கின்றோம்

SNEA   பொதுசெயலருக்கும்  AIGETOA பொதுசெயலருக்கும்
தொழிற்சங்க நடவடிக்கைகளூக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக‌
CHARGESHEET (MAJOR PENALTY) கொடுத்துள்ளதை வன்மையாக‌
கண்டிக்கின்றோம்.
29/8/17 திருச்சியில் நடைபெற்ற‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாவட்டசெயலர் அஸ்லம்பாஷா கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கியோதோடு  இரண்டு பொதுசெயலர்களூக்கும் கொடுக்கப்பட்ட‌
CHARGESHEET உடனே வாபஸ் வாங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்
                     BSNL CCWF அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்

BSNL CCWF மத்திய செயற்குழு முடிவுன்படி பணிபாதுகாப்பு/கோரிக்கைதினம்
ஆர்ப்பாட்டம் 23/8/2017 அன்று நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டிருந்தது
அதன்படி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்