Saturday 24 November 2018


AUAB  சார்பாக வேலை நிறுத்த கூட்டங்கள்

26/11/18—மதியம் 1.30 மணி PGM அலுவலக் ம் திருச்சி
27/11/18-09.30 மணி திருவரங்கம்,மெயின்கார்டுகேட்
மாலை 4.00 மணி சாலை ரோடு உறையுர்
28/11/18-09.30 மணி BHEL TOWN SHIP EXCHANGE
29/11/18—கரூர்,குளித்தலை
30/11/18—பெரம்பலூர்
1/12/18—PGM அலுவலகம் திருச்சி
அனைத்து ஊழியர்களூம்,அதிகாரிகளூம் பங்கேற்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday 14 November 2018


3-12-2018  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் AUAB அறைகூவல்
14/11/2018 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற AUAB  கூட்டத்தில்  நடைபெற்ற நமது இயக்கங்களையும்,6/11/2018 அன்று DOT, BSNLக்கு எழுதிய கடிதத்தில் நமது கோரிக்கைகளை நிராகரித்து இருப்பதையும் ஆழமாக விவாதித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)   3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு பதிலாக கால தாமதத்தை தவிர்க்க  DOT யே ஓப்புதல் கொடுக்கவேண்டுமென்று வலியுறுத்துவது.
2)   3/12/2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு செல்வது
3)   அரசாங்கத்தின் திட்டங்களான NOFN,NFS,LWE ஆகிய பணிகளை புறக்கணிப்பது
4)   AUAB ல் அங்கம் வகிக்காத மற்ற சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பது

ஆகவே வேலைநிறுத்தம் ஓன்றே நமது கோரிக்கைகளை வென்றடைய முடியும்
நமது ஒன்றுபட்ட சக்தியினை திருச்சி மாவட்டத்தில் திரட்டுவோம்
வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்,கோரிக்கைகளை வெல்வோம்.

Monday 12 November 2018


அநீதிகண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடமால் அநீதி களைய முடியாது
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம்
DOT செகரட்டரியுடன் 2/11/18 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்
BSNL க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நமது கோரிக்கைகளான 3வது ஊதிய திருத்தம்,,4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு,பென்ஷன் பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாக நிராகரிக்ககூடிய வகையில் உள்ளது.ஆகவே நாம் ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும் ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி 30/11/18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக வேண்டியுள்ளது.
ஊழியர்களை தயார்படுத்தும்விதமாக 14/11/18 அன்று நடைபெறவுள்ள மனிதசங்கிலி இயக்கத்தில் அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
மனிதசங்கிலி இயக்கம் 14/11/18 அன்று மாலை 3.00 மணியளவில் ஆஞ்சனேயர் கோவிலிலிருந்து நமது அலுவலம் வரை

Wednesday 7 November 2018


                       நவம்பர்-20 தர்ணா
BSNL CASUAL CONTRACT WORKERS FEDERATION சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 20/11/2018 தர்ணா நடத்தவுள்ளனர்.
1)குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000/ வழங்கவேண்டும்
2)ஊதிய பட்டுவாடா தாமதத்தை கண்டித்தும்
3) EPF,ESI முறையாக கட்டவேண்டுமென்றும்
4) பணிநீக்கம் செய்யப்பட்ட ஓப்பந்த தொழிலாளர்களூக்கு மீண்டும் பணி வழங்க கோரியும்
நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இந்த தர்ணாவில் BSNL ஊழியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டுமென்று நமது மத்திய சங்கம்
அறைகூவல்விட்டுள்ளது.
ஆகவே திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Saturday 3 November 2018


PGM வுடன் சந்திப்பு------3/11/2018
நமது மாவட்டத்திற்கு பொறுப்பாக இருக்ககூடிய திரு.C.V.வினோத் PGM அவர்களை 3/11/2018 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்
தோழர் T.தேவராஜ் மாவட்டதலைவர் தோழர் S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலாளர் தோழர் G.சுந்தரராஜீ மாநில உதவிபொருளாளர்        தோழர் R.கோபி மாவட்ட பொருளாளர்.
முதன்மை பொதுமேலாளர்கள் அவர்களின் அணுகுமுறை நன்றாக இருந்தது நாம் ஏற்கனவே ஓப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவேண்டுமென்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் கடிதம் கொடுத்து பேசினோம்.அதனை தொடர்ந்து 29/10/18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனை தொடர்ந்து புதிய முதன்மை பொதுமேலாளர் அவர்களூக்கு கடிதம் கொடுத்து பேசினோம்.அவரும் அனைத்து கான்ட்ராக்டர்களிடமும் பேசியுள்ளார்.அதனடிப்படையில் HOUSE KEEPING ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 5250/ Manpower ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 3500/ ம் பட்டுவாடாகியுள்ளது.அனைத்து ஓப்பந்த தொழிலாளர்களூக்கும் அனைத்து கான்ட்ராக்டர்களூம் போனஸ் பட்டுவாடா ஆகவில்லை உடனடியாக பொது மேலாளர் அவர்கள் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அதே போல் புதிய டெண்டரில் முழுவதுமாக கொடுக்கும் வகையில் கண்டிஷன் சேர்க்கப்படும். திறனுக்கேற்ற ஊதியம் கொண்டுவரப்படும் என்று
கூறினார். நமது பிரச்சினைகள் சம்மந்தமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
மீண்டும் வருகிற 14 ந்தேதி சந்திக்கலாமென்று கூறியுள்ளார்.
முதன்மை பொதுமேலாளர் அவர்க்ளூக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்


DOT SECRETARY வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 2/11/2018
DOT SECRETARY வுடன் AUAB  தலைவர்களூடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
1.   3 வது ஊதியதிருத்தம் BSNL யிடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளது அது கிடைத்தவுடன் அமைச்சரவை குறிப்பு தயார் செய்து மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும். BSNL நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் DOT எழுப்பிய சந்தேகங்களூக்கு பதில் கொடுத்துவிடும்.மூன்று மாதங்களூக்குள் இதை முடிவுக்கவேண்டும் .பாராளூமன்ற தேர்தல் அறிவித்துவிட்டால் சிரமமாகிவிடுமென்று சொல்லப்பட்டது.விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்று   DOT SECRETARY உறுதியளித்தார்.
2.   4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு சம்மந்தமாக அமைச்சரவை குறிப்பு
மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது பின் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும்
3.பென்ஷன் பங்களிப்பு உண்மை ஊதியத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை DOT யின் RECOMMENDATION வுடன் அடுத்த வாரம் DEPARTMENT OF EXPENDITURE க்கு அனுப்பபடும்
4.பென்ஷன் திருத்தம் சம்மந்தமான பிரச்சினையில் DOT SECRETARY அவர்கள் MEMBER SERVICES ஐ உடனடியாக இது சம்மந்தமாக தன்னுடன் விவாதிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
5. நேரடி நியமன ஊழியர்களூக்கு ஓய்வூதிய பலன்களை
உயர்த்தி கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை சம்மந்தமாக BSNL CMD தான் முடிவெடுக்கவேண்டுமென்று DOT SECRETARY கூறினார்.CMD அவர்கள் ஏற்கனவே இருந்ததைவிட இன்னும் கூடுதலாக 2 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப்பின் AUAB தலைவர்கள் கூடி பேசினார்கள்.மற்ற பிரச்சினைகளில் DOT யின் பதில்கள் திருப்தியாக இருந்தாலும்  ஊதிய திருத்த பிரச்சினையில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை ஆகவே ஏற்கனவே திட்டமிட்ட 14 ந் தேதி பேரணி சக்திமிக்கதாக நடத்தவேண்டுமென்று AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
DOT SECRETARY ஐ சந்திப்பதற்கு முன் நடைபெற்ற AUAB கூட்டத்தில்
கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   AUAB வின் சேர்மனாக தோழர் சந்தேஷ்வர்சிங் கன்வீனராக தோழர் அபிமன்யூ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
2)   நிர்வாகத்திற்கு கொடுக்கும் கடிதங்களில் இருவரும் கையெழுத்து இட்டு தருவார்கள்
3)   வேலைநிறுத்த நோட்டீசீல் அனைத்து பொதுசெயலர்களூம் கையெழுத்து இடுவார்கள்
4)   இதேபோன்று அமைப்பு மாநில, மாவட்டங்களிலும் ஏற்படுத்தவேண்டும்.