Monday 29 January 2018

திருச்சியில் 30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்ற நிகழ்வுகள்





























                   DO   OR    DIE   செய் அல்லது செத்து மடி 

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளான 3 வது ஊதிய திருத்தம்
1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும், 
துணை டவர் கம்பெனி உருவாக்கும் முடிவை திரும்ப பெறு வலியுறுத்தி

30/1/2018 முதல் 5 நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் 
அமைதியான வழியில் போராடுவது, ஆனால் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு
தருவதில்லை
30/1/2018 முதல் காலவரையரையற்ற விதிப்படி வேலைநிறுத்தம்.

இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை ஆகவே நமக்கு
வேறு வழியில்லை.

ஓன்று பட்டு போராடுவோம் | அனைவரும் பங்கேற்பீர்| வெற்றி பெறச்செய்வீர்|

Friday 19 January 2018

                மாவட்ட செயற்குழு ஜனவரி 25 திருச்சியில்

நமது மாவட்ட செயற்குழு வருகிற 25ந்தேதி திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்,

நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மாலை 4.00 மணிக்கு அனைத்து சங்கங்களின் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிளைசெயலர்கள் தங்களது கிளைகளிலிருந்து பெரும்பாலான தோழர்கள் கலந்து
கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறென். 

30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம்
நடைபெறவுள்ளது.அதிலும் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும்.
                                                                  23-2-2018

                                     சஞ்சார் பவன்நோக்கி பேரணி 

நம்முடைய கோரிக்கைகளூக்காக புது டெல்லியில் சஞ்சார் பவன்நோக்கி பேரணி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன்  கேட்டுக் கொள்கிறோம்

Friday 12 January 2018

                                      சோப்பு,டவல் காண தொகை

சோப்பு,டவல்,பேனா,டம்ளர்,டைரி ஆகியவற்றிற்கான தொகை ரூ 500 
கொடுக்கப்பட்டுவந்தது. இதை உயர்த்தி கொடுக்க வேண்டுமென்று
நாம் நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வந்தோம் அதனடிப்படையில்
நிர்வாகம் அதை ரூ 750 உயர்த்தி கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது
அதனடிப்படையில் அந்த தொகை இந்த மாதம் ஜனவரி ஊதியத்துடன்
சேர்த்து வழங்கப்படும் .மாநில சங்கத்திற்கு நமது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday 10 January 2018

8/1/18 அன்று நடைபெற்ற அனைத்து சங்ககூட்ட முடிவுகள்

1)30/1/18 முதல் 5 நாட்களூக்கு அகில இந்திய,மாநில,மாவட்ட‌
தலைநகரங்களில் சத்தியாகிரக போராட்டம்
2)30/1/18 முதல் விதிப்படி வேலை செய்தல்
3) 28/2/18 புது டெல்லியில் MARCH TO SANCHAR BHWAVAN
4) நமது துறை அமைச்சர்,DOT SECRETARY, CMD ஐ சந்திப்பது
5) SNEA தலைவர்  G L JOGI      AIBSNLEA GS PRAHALADRAI டவர்
கம்பெனி அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடரலாமா 
என்பதை வக்கீல்களின் ஆலோசனை பெறுவது.
6) BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA ஆகிய சங்கங்களின் பொது செயலர்
களை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி
நடைபெறுகின்ற போராட்டங்களை கண்காணிக்கும்
7) அரசியல் கட்சிகள், மற்ற துறை சஙகங்களின் ஆதரவை பெறுவது.
 கோரிக்கைகள்
__________________
1)1/1/2017 முதல் 15 பிட்மெண்டுடன் ஊதியதிருத்தம் அமுல்படுத்த வேண்டும்
2) பென்ஷனை மாற்றி அமைக்கவேண்டும்
3)2 வது ஊதிய குழுவில் விடுபட்டுள்ள கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்
4)டவர் கம்பெனி முடிவை திரும்ப பெற வேண்டும்
5) ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்ககூடாது.VRS
அமுல்படுத்தகூடாது. 
                                        கண்டனம் தெரிவிக்கப்பட்டது

அனைத்து சங்கங்களின் சார்பாக 9/1/2018 அன்று CMD ஐ சந்தித்து
டவர் கம்பெனிக்கு CMD ஐ நியமித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO BTEU,BSNLMS,TEPU,SEWA,BSNLOA,TOABSNL
BSNL-ATM ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
BSNL  தற்போதைய DIRECTOR கள் டவர் கம்பெனிக்கு மெம்பர்களாக‌
நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் BSNL போர்டின் அதிகாரம் 
குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால்  CMD  இது சம்மந்தமாக மொளனமாக இருந்துவிட்டார்,
                                                   ஆதரவு ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ள போக்குவரத்து தொழிலாளர்களூக்கு
ஆதரவாக அனைத்து சங்கங்களின் சார்பாக 10/1/18 அன்று PGM அலுவலகத்தில்
நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களூக்கும் நம்முடைய‌
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday 7 January 2018

                                            கண்டன ஆர்ப்பாட்டம்

டவர் கம்பெனிக்கு நம்முடைய எதிர்ப்பையும் மீறி CMD ஐ
நியமித்ததை எதிர்த்து 8/1/2018 ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமென தோழமையுடன் கேட்டுக்
கொள்கிறோம்.
                                                ஆதரவு ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்ததில் பங்கேற்றுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு
ஆதரவாக  8/1/2018 அன்று மத்திய,மாநில அரசு ஊழியர் சங்கங்கள்.வங்கி,
இன்சுரன்ஸ்,தொலைதொடர்பு ஆகிய சங்கங்களின் சார்பாக மன்னார்புரத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமாய்
தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Friday 5 January 2018

                                                          FLASH

நம்முடைய கடுமையான போராட்டத்தின் விளைவாக 
ஓப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்திற்காக ரூபாய் 14 கோடி கார்ப்பரேட்
அலுவலகம் தமிழ்மாநிலத்திற்கு ஓதுக்கீடு செய்துள்ளது.

Wednesday 3 January 2018

                                             நியமனத்தை கண்டிக்கிறோம்

BSNL ல் உள்ள டவர்களை பிரித்து தனியாக துணைடவர் கம்பெனி
உருவாக்ககூடாது என்று டிசம்பர் 12,13 இரண்டு நாள் அனைத்து 
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் இணைந்து வேலைநிறுத்தம்
செய்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் டவர் கம்பெனிக்கு என்று
ஒரு IAS  அதிகாரியை   CMD நியமனம் செய்துள்ள தை நம்முடைய
சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இது சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை வருகிற 8/1/2018 அன்று 
நடைபெறவுள்ள அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
மூன்றாம் நாள் உண்ணாவிரத  போராட்டம் வெல்லட்டும்

ஓப்பந்த தொழிலாளர்களூக்கு நவம்பர்மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை
என்று கண்டித்தும்,உடனடியாக ஊதியம் வழங்ககோரியும் சென்னை மாநில‌
நிர்வாகம் முன்பு 2/1/18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.அவர்களூக்கு ஆதரவாக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
(கருர்,புதுக்கோட்டை.திருச்சி) நடைபெற்றுள்ளது.அதில் கலந்து கொண்ட‌
அனைத்து தோழர்களுக்கும் இரண்டு மாவட்டசங்கங்களின் சார்பாக 
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ள தோழர்களூக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
3-12-2018 அன்று திருச்சியில் ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌ வழங்கவேண்டுமென்றும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
புதுக்கோட்டைகிளையில்



Monday 1 January 2018

                                                                வாழ்த்துகிறோம்

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை
வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌
வழங்கவேண்டுமென்றும், மாவட்டங்களில் பல்வேறு போராட்டம்
நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் மாநில நிர்வாக‌
அலுவலகம் முன்பு இன்று முதல் (2-1-2018) மாநிலநிர்வாகிகள்  
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

போராட்டம்  வெல்க|,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்