Tuesday 7 January 2020

ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து குறிப்பாக BSNL உள்ளிட்ட பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்தும் நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்தில்
முழுமையாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்வோம்.
BSNL VRS ல் செல்லக்கூடிய ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடிய கடைசி வேலைநிறுத்தம்.BSNL ஐ பாதுகாக்க இறுதிவரை நான் பங்கெடுத்தேன் என்று
நெஞ்சை நிமிர்த்தி செல்வோம்

Monday 18 November 2019

                           மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம்
                                              2019-நவம்பர்-20.21.22


                 புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் அக்டோபர் மாத ஊதியம் உடனே வழங்கவேண்டும்,ஒப்பந்த தொழிலாளர்களூக்கு 10 மாதமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்,VRS ல் உள்ள
சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 20.21.22 மூன்று நாட்கள் நடைபெறவுள்ள தொடர் உண்ணாவிரதத்தில் அனைத்து சங்கத்திலிருந்தும் அனைத்து கிளைகளிலிலுருந்தும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுமென்று தோழமையுடன் கேடுக்கொள்கிறோம்.

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ----TRICHY SSA

Tuesday 1 October 2019


NFTE சென்னை மாநில சங்கத்தின் அவதூறு பிரச்சாரங்களை முறியடிப்போம்

உண்மை நிலையினை விளக்கி மாவட்ட தலைநகரங்களில் 4/10/2019 அன்று சிறப்புக்கூட்டம்
அனைவரும் பங்கேற்பீர்


   சத்தியாகிரக போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களூக்கு 9 மாத ஊதியம் உடனடியாக வழங்க கோரியும்,பணி நீக்கம், பணிநேர குறைப்பு,ஆகிய திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் அக்டோபர் 3,4,5 மூன்று நாட்களூக்கு சத்தியாகிரக போராட்டம் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள் (BSNLEU,TNTCWU) அறைகூவல் விட்டுள்ளன அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் ஒவ்வொரு கிளையிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இரண்டு சங்கங்களிலிருந்தும் கலந்து கொள்ள வேண்டுமென்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்
BSNLEU--------TNTCWU----திருச்சி மாவட்ட சங்கங்கள்

Sunday 29 September 2019


         ஆர்ப்பாட்டம்
Unions and Associations சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 1/10/2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
கோரிக்கைகள்
1.BSNL க்கு உடனடியாக 4G ஸ்பெக்ரம் வழங்கவேண்டும்
2.BSNL ஊழியர்களூக்கு உடனடியாக ஊதியம் BSNL அல்லது DOT உடனடியாக வழங்கவேண்டும்
3.ஒப்பந்ததொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்,மின்சார கட்டணம்.வாடகை உள்பட வழங்கவேண்டிய தொகைகளை வழங்கிடு
4.3 வது ஊதிய திருத்தத்தை அமுல்படுத்து
5.2000ம ஆண்டு மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவுகளை அமுல்படுத்து
6.பணிநீக்கம்,மற்றும் ஒய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைப்பதை கைவிடு
7.பென்ஷனுக்கான பங்களிப்பு அரசாங்க விதிப்படி அமுல்படுத்து


BSNLEU----SNEA----AIBSNLEA---திருச்சி மாவட்ட சங்கங்கள்

Friday 28 June 2019


 BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
                 திருச்சி SSA.                         28/6/19
அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே.
BSNL லின் வளர்ச்சிக்காக  பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களூக்கு செய்த வேலைக்கு ஊதியம் ஆறு மாதமாக தமிழ்நாட்டில் பல SSA க்களில் கொடுக்கப்படவில்லை.திருச்சியில் 4 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.அவர்களூடைய குடும்பம் பசி.பட்டினியால் வாடுகிறது,சமுதாயத்தில் மிக மோசமாக நடத்தப்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது,அவர்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்தின் இந்த அலட்சிய போக்கினை கண்டித்தும் செய்த வேலைக்கு ஊதியம் உடனடியாக வழங்ககோரியும் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக ஜீலை 2 முதல் 4 வரை (72 மணி நேரம்) தொடர் உண்ணாவிரதம் இருக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது . இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டு மாவட்ட சங்கங்களின் உறுப்பினர்கள்
பெருவாரியாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்க உதவிபுரிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1.   ஒப்பந்த தொழிலாளர்களூக்கு வழங்க வேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்கு| அவர்களூடைய குடும்பத்தை பாதுகாத்திடு|
2.   நீதிமன்ற தீர்ப்பின்படி 2009-2010 க்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிகை எடு|
3.   EPF,ESI க்கு பிடித்தம் செய்கின்ற பணத்தினை உரிய இடத்தில் கட்டுவதை உறுதி செய்|
2/7/2019-------PGM OFFICE,D-TAX,AUTO EXGE,CANTONMENT,TIRUVERAMBUR ,THILLAINAGAR
3/7/2019--------TURAIYUR,PERAMBALUR,ARIYALUR,JAYAMKONDAM,SAMAYAPURAM,LALGUDI
4/7/2019---------KARUR,KULITALAI,MUSIRI,PUDUKOTTAI,MANAPARAI
ஒவ்வொரு நாளும் மேலே குறிப்பிட்ட கிளைகளிலிருந்து பங்கேற்பதை உறுதிபடுத்தவேண்டும்.
இரண்டு மாவட்ட சங்கங்களின் மாவட்ட சங்க நிர்வாகிகள்,
கிளை செயலர்கள் மூன்று நாட்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
2/7/2019 காலை 10.00 மணிக்கு துவங்கும் உண்ணாவிரதம் 3/7/19 காலை 10.00 மணிக்கு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் இவ்வாரு தான் கிளைகளிலிருந்து பங்கேற்க வேண்டும்.
இறுதியாக 5/7/2019 காலை 10.00 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவுபெறும்.
2,3,4/7/2019-காலை 10.00 மணிக்கு PGM அலுவலகம் திருச்சி
     அனைவரும் பங்கேற்பீர்| வெற்றி பெறச்செய்வீர்|
                  தோழமையுடன்
                    BSNLEU              TNTCWU
மாவட்ட தலைவர் = தோழர் T. தேவராஜ்     தோழர். G. சுந்தரராஜூ
மாவட்ட செயலர்  =       .S அஸ்லம்பாஷா        G. முபாரக்அலி
மாவட்டபொருளாளர் = “     R. கோபி                A.. சண்முகம்

Friday 21 June 2019


ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து.58 ஆக குறைக்கும் பிரச்சினை
தற்போது மத்திய சங்கத்திற்கு நாடு முழுவதிலிருந்து ஒய்வு பெறும் வயது சம்மந்தமாக என்ன நிலைமை என்று நமது தோழர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மத்திய சங்கம் அறிந்த வகையில் அரசாங்கத்தில் இந்த பிரச்சினை சம்மந்தமாக கடும் விவாதம் நடந்து வருவதாக அறிகிறோம்.  கடந்த 6/6/2019 அன்று நமது சங்கத்தின் சார்பாக அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நாம் சுட்டி காட்டியிருந்தோம் அதில் 2000 த்தில் BSNL ஆகும் போது அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி அரசாங்க உத்திரவு BSNL க்கும் அமுல்படுத்தப்படும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒய்வு பெறும் வயது 60 ஆகும்.ஆகவே இது BSNL லில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆகவே அரசாங்கம் 2000 ம் வருடம் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றும் என நம்புகிறோம்.

19/6/2019 அன்று புதுடெல்லியில் நடந்த AUAB கூட்ட முடிவுகள்
புதுடெல்லியில் 18/6/19 அன்று நடந்த AUAB கூட்டத்தில் BSNLEU,NFTE-BSNL,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,BSNL-ATM,TEPU ஆகிய சங்கங்களின் பொதுசெயலர்கள்,பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறிப்பாக EB BILL கட்டாமல் FUSE பிடுங்கி செல்ல கூடிய நிலைமை,கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது இதனால் நம்முடைய வேலை தரம் பாதிப்பு,முதலீட்டு செலவிற்கு தடை விதித்துள்ளது பற்றியெல்லாம் விரிவாக விவாதம் நடத்தி கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)   தற்போதைய நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக நமது அமைச்சரை சந்திப்பதற்கு கடிதம் கொடுப்பது (கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது).
2)   BSNL நிர்வாகம் முதலீட்டு செலவிற்கு விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும்
3)   தற்போதைய நிதி  நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி செய்யவேண்டுமென்று அமைச்சருக்கு விளக்க கடிதம் எழுதுவது.
CMD ஐ சந்தித்து  FR 17A ஐ உடனடியாக கைவிட வேண்டுமென்று கோருவது.(இதன்படி அனைத்து பொதுசெயலர்களூம் CMD ஐ சந்தித்து பேசினர் அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்)

Monday 10 June 2019


                                 12-6-2019--------மாலை நேர தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை,நமது மாவட்டத்தில் 3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றது.நமது மாவட்டத்தில் 10 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இரண்டு மாநில சங்கங்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் மா நிலம் முழுவதும் 12/6/2019 அன்று மாலை நேர தர்ணா நடத்த அறை கூவல் விடப்பட்டுள்ளது.
ஆகவே BSNL ஊழியர் சங்க உறுப்பினர்களூம்,ஒப்பந்த  தொழிலாளர் சங்க உறுப்பினர்களூம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
12-6-2019---------மாலை 4.00 மணி-------PGM அலுவலகம் திருச்சி
BSNLEU--------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

Wednesday 29 May 2019


இந்த மாதம் (31/5/2019) பணி ஒய்வு பெறும் நமது சங்க உறுப்பினர்கள்
1.தோழர் .S.  பாலு            JE         குளித்தலை
2. “      M. முருகேசன்       TT         புதுக்கோட்டை
3. “      S. கந்தன்            TT         அரியலூர்
4.”       P. ஆறுமுகம்        TT         புதுக்கோட்டை
5.”       K,V,  ராஜேந்திரன்    TT         தொட்டியம்
6.”       M.A.  சகாயராஜ்      JE         திருச்சி
7.”       K. பாஸ்கர்           TT        திருச்சி
8.”       S. முரளி             TT        திருச்சி
9.”       M. செந்தாமரைகண்ணன் TT      திருச்சி


பணி ஒய்வு காலத்தை நீண்ட ஆயுளுடனும்,மன நிம்மதியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்
BSNLEU திருச்சி மாவட்ட சங்கம்

Tuesday 28 May 2019


8வது சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் விரைவில் வரவுள்ளது
             தயாராயிருப்போம்
          BSNLEU------திருச்சி மாவட்டம்


            காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்ககோரி 28/5/19 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் நேற்றைய தினம் DGM ADMN அவர்களும் (27/5/19) இன்று 28/5/19  PGM அவர்களூம் நம்மை அழைத்து பேசினார்கள் கான்ட்ராக்டர்களை அழைத்து பேசி ஊதியம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.சனிக்கிழமைக்குள் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் திங்கள் முதல் (3/6/19) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளோம்.
காத்திருப்போம் அல்லது காத்திருப்போம் போராட்டத்தை துவங்குவோம்
BSNLEU---------------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

Saturday 25 May 2019


                 காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை .இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக பல கட்ட போராட்டம் நடத்திய பின்பும் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை ஆகவே கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் சென்னையில் மாநில அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.டெல்லியில் நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுவதும் 30 சதவீதம் நிதி 14/5/19 ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஆகவே ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்யவேண்டுமென்று 28/5/2019 காலை முதல் ஊதியம் கொடுக்கும் வரை திருச்சி PGM அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.ஆகவே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களூம் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU---------TNTCWU--------திருச்சி மாவட்ட சங்கங்கள்