Sunday 9 December 2018

அமைச்சர் வழிகாட்டுதலின் படி அனைத்து சங்க கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திட DOT சார்பில் அதிகாரியை நியமித்திடு கூட்டமைப்பு - DOT செயலருக்கு கடிதம்...


வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அனைத்து சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை தொடர்ந்து விவாதிக்க DOT தரப்பிலிருந்து ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அனைத்து சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெவித்திருந்தார். DOT வெளியிட்ட மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சரின் வழிகாட்டுதலின் படி அதிகாரி ஒருவரை நியமிக்க  அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக கூட்டமையின் தலைவர் சந்தேஸ்வர் சிங் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் தோழர் அபிமன்யு அவர்களும் கூட்டாக கையெழுத்திட்டு திருமதி அருணா சுந்தரராஜன் , DOT செயலர் அவர்களுக்கு இன்று 06.12.2018 கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடித்தத்தில் அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி DOT யின் கூடுதல் செயலராக இருப்பின் DOTயின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் அவ்வதிகாரியை நியமித்தால் மட்டுமே தொடர்ந்து விவாதித்து அமைச்சரின் உறுதிமொழிகள் நிறைவேறுவது என்பது நனவாகும் என்றும் ஊழியர் நலனை முன்னிட்டும் தொழில் அமைதியை காக்கவும் அனைத்து சங்க கூட்டமைப்புடன் விவாதிக்க அவரை விரைவாக நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடிதத்தின் நகல் DOTயின் கூடுதல் செயலர் அன்சு பிரகாஷ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment