கோல் இந்தியா நிறுவனம் நமக்கு ஒரு படிப்பினை
கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு 25 சதவீதம் ஊதியதிருத்தம்
வேண்டும் என்று கேட்டு போராடினார்கள். நிர்வாகம் 10 சதவீதம் கொடுக்க
முன்வந்தது ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவிலலை.நிர்வாகம் 18 சதவீதம்
கொடுக்க முன்வந்தது.ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இதற்கிடையில்
DPE பொதுதுறை நிறுவனங்களுக்கு 15 சதவீதம் தான் ஊதிய ஊயர்வு என்று
அறிவித்தது.இது கோல் இந்தியாவுக்கும் பொருந்தும். அதுவும் பத்து வருட
ஒப்பந்தம்.ஆனால் கோல் இந்தியா ஊழியர்கள் BMS சங்கம் உள்பட ஒன்றாக
இணைந்து 25 சதவீதம் உயர்வு வழங்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்
கிறார்கள் அதுவும் ஐந்து வருடங்களூக்கு.நிச்சயம் ஒரு கணிசமான ஊதிய
உயர்வு பெறுவார்கள்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.
இது BSNL ல் பணீயாற்றக்கூடிய ஊழியர்கள் படிப்பினையாக எடுத்துக் கொண்டு
அனைத்து சஙகங்களும் ஒன்று பட்டு போராட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளதை
புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment