Tuesday, 24 April 2018

                                                     வாழ்த்துகிறோம்

சமீபத்தில் 28/1/2018 நடைபெற்ற JE தேர்வில் தமிழ்நாட்டில் 6 பேர்
தேர்வாகியுள்ளனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்தவரும் நமது சங்கத்தின் அரவாக்குறிச்சி
கிளையில் பணியாற்றுபவரான தோழர்   சுரேஷ்குமார் அவர்கள்
தேர்வாகியுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, 22 April 2018

கிரிமினல் பொதுமேலாளர் ஆதேஷ்குமார் குப்தா CBI யால்
கைது செய்யப்பட்டார்.

 ஆதேஷ்குமார் குப்தா பொதுமேலாளர் பரிதாபாத் CBI யால்
கைது செய்யப்பட்டார்.இவர்தான் காசியாத்தின் பொதுமேலாளராக‌
இருந்தபோது நமது மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால்சிங்
அவர்கள் கொலையில் சம்மந்தப்பட்டவர்.
அதேபோல் நொய்டாவின் பொதுமேலாளராக இருந்த போதும்
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் 
மேலிட செல்வாக்கோடு வெளியில் வந்தார். தற்போது
CBI யால்கைது செய்யப்பட்டுள்ளார்.
                                                       GPF   பட்டுவாடா

INTEREST CALCULATION நடந்து கொண்டிருப்பதால் GPF   26ந் தேதி 
பட்டுவாடா ஆகும்.

Wednesday, 18 April 2018


8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்க முடிவுகள்

அனைத்து மத்திய பொதுதுறை நிறுவன தொழிற்சங்கங்களின் சார்பாக‌
.8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நமது பொதுசெயலர்
தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்
அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நாடு முழுவதும் அனைத்து பொதுதுறை நிறுவனங்களிலும் பிரச்சாரம்
செயவது
2)பிரதம மந்திரி மற்றும் கனரக மந்திரிக்கு FAX அனுப்புவது
3)அ) தனியார்மயம் ஆ) ஊதிய திருத்தம் இ) FIXED EMPLOYMENT இது சம்மந்தமாக‌
விவாதிக்க புதுடெல்லியில் மே 25 ந் தேதி கருத்தரங்கம் நடத்துவது.

Tuesday, 10 April 2018

  12/4/2018   அன்று நடைபெற்ற  தர்ணா


 
 
 

                                                  12/4/2018   தர்ணா

துணைடவர் கம்பெனி செயல்படுத்த துவங்குவதை எதிர்த்து 
12/4/18 அன்று நாடு முழுவதும் ALL UNIONS AND ASSOCIATIONS 
சார்பாக தர்ணா நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில்
அனைத்து கிளைகளிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Wednesday, 4 April 2018

                                           அடுத்த அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு கர்நாடகா மாநிலம்
மைசூரில் 2019 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது

Saturday, 31 March 2018

                    UNION BANK க்கான கடன் திட்டம் நீட்டிப்பு

UNION BANK க்கான கடன் திட்டம் 31/12/2017 வுடன் முடிந்துவிட்டது
இதை நீட்டிக்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து
கேட்டு வந்தோம். அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
1/1/2018 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்.

                                   நிறுவனம் காக்க மீண்டும் போராட்டம்

நம்முடைய எதிர்ப்பையும் மீறி துணைடவர் கம்பெனி 1/4/2018 முதல்
செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ஆகவே இதை கண்டித்து
27/3/18 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், இதனை
தொடர்ந்து BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,BSNLATM.AIGETOA,BSNLOA,FNTO.
SEWABSNL,BSNLMS ஆகிய சங்கங்கள் இணைந்து DOT க்கு மெமோரண்டம்
கொடுத்துள்ளனர். துணைடவர் கம்பெனி செயல்படுத்தும் முயற்சியை
உடனடியாக கைவிட வேண்டும்.இதை வலியுறுத்தி கீழ்கண்ட 
இயக்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை நமது மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டுமென‌
கேட்டுக்கொள்கிறோம்.
1) 12-4-2018     தர்ணா 

2) இயக்குனர் குழுவில் ஒப்புதல் அளித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

3)19/4/2018 அன்று கவர்னரிடம் மனு கொடுப்பது.

Friday, 30 March 2018

                                                   வாழ்த்துக்கள்

மார்ச் மாதம் செல் இணைப்புக்கள் தமிழ்நாட்டில் 10 லட்சம் இணைப்புகளுக்கு
மேல் கொடுத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு லட்சத்து
இருபதாயிரத்திற்கு மேல் செல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் 
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 23 March 2018

                                         27/3/2018   ஆர்ப்பாட்டம்

BSNL ன் டவர்களை தனியாக பிரித்து துணைடவர் கம்பெனி உருவாக்ககூடாது
என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அரசாங்கம் தற்போது 1/4/18 முதல்
அதை உருவாக்க திட்டமிட்டுள்ளது அதற்கான பூர்வாங்க வேலைகள் 
நடைபெற்று வருகிறது.ஆக வே இதை கண்டித்து அனைத்து சங்கங்களும்
(BSNLEU,   NFTE   SNEA    AIBSNLEA    FNTO    SEWABSNL    BSNLMS BSNLOA )
27-3-2018 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த் வேண்டுமென்று 
அறை கூவல் விட்டுள்ளன . ஆகவே அதை நம்முடைய மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்

 27/3/2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
 
 
 
 
 

Wednesday, 21 March 2018

சங்க அமைப்பு தினம்---------22-3-2018

நமது சங்கம் 2001 ல் விசாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து 
18 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.
இந்த 17 ஆண்டுகளில் ஊழியர்களின் தொடர்ந்த நம்பிக்கையின்காரணமாக‌
தொடர்ச்சியாக 6 வது முறையாக அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்று
வந்துள்ளோம்.
BSNL  ன்உரிமைக்காகவும்,BSNL ஐ பாதுகாக்கவும் பாடுபடும் என்று உறுதியேற்போம்

Friday, 16 March 2018

                                                     வாழ்த்துக்கள்

சமீபத்தில் அமிர்தரஸில் நடைபெற்ற NFTE அகில இந்திய மாநாட்டில்
திருச்சி மாவட்டத்தின்NFTE  செயலர் தோழர் பழனியப்பன் அவர்கள்
அகில இந்திய உதவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.