Wednesday 26 September 2018


25-9-2018 அன்று நடைபெற்ற ஊழியர் தரப்பு கூட்டம்
ஊதிய திருத்தத்திற்கான ஊழியர் தரப்பு கூட்டம் 25/9/18 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ NFTE பொதுசெயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் உள்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில் ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக உறுப்பினர்களிடமிருந்து கருத்து கேட்ட நிலையில் ஊதிய தேக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற நிலையில் DOT யின் ஒப்புதல் பெறும் வகையில் அனுப்புவதற்கு ஏதுவாக ஊதிய திருத்தத்தில் விரைவில் உடன்படிக்கை கையெழுத்து காணுவதற்கு முயற்சி கொள்ளவேண்டும்.அடுத்து பெர்க்ஸ் மற்றும் அலவன்சுகள் சம்மந்தமாக உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.இது DOT க்கு போகவேண்டிய அவசியமில்லை BSNL BOARD ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது. அதற்கான நடவடிகை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.



No comments:

Post a Comment