Saturday 25 May 2019


                 காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை .இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக பல கட்ட போராட்டம் நடத்திய பின்பும் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை ஆகவே கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் சென்னையில் மாநில அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.டெல்லியில் நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுவதும் 30 சதவீதம் நிதி 14/5/19 ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஆகவே ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்யவேண்டுமென்று 28/5/2019 காலை முதல் ஊதியம் கொடுக்கும் வரை திருச்சி PGM அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.ஆகவே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களூம் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU---------TNTCWU--------திருச்சி மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment