Monday, 30 April 2018

3/5/2018 அன்று அவசர மாவட்டசெயற்குழு

நமது சங்கத்தின் அவசர மாவட்ட செயற்குழு 3/5/18 அன்று
திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டசங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல்
கலந்து கொள்ளவும்
1) மத்தியசெயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
2) மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
3) பிற தலைவர் அனுமதியுடன்

Tuesday, 24 April 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்
புதுடெல்லியில் 24/4/18 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
கூட்டம் நடைபெற்றது. அ தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)மே மாதம்  7ந் தேதி முதல் 11ந் தேதி வரை துணை டவர் கம்பெனி
துவக்குவதை எதிர்த்து தெரு முனை பிரச்சாரம் நடத்த வேண்டும்
2) மே 11ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், பிரதமமந்திரிக்கு
FAX  கொடுக்கவேண்டும்
3) ஊதியதிருத்தம் சம்மந்தமாக DPE யிலிருந்து   DOT க்கு வந்த சூழ்நிலையில்
அமைச்சரையும் , DOT செகரட்டரியையும் சந்திப்பது.
4)புது டெல்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்
5) அடுத்த கூட்டம் மே 8ந்தேதி நடைபெறும்.
                                                     வாழ்த்துகிறோம்

சமீபத்தில் 28/1/2018 நடைபெற்ற JE தேர்வில் தமிழ்நாட்டில் 6 பேர்
தேர்வாகியுள்ளனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்தவரும் நமது சங்கத்தின் அரவாக்குறிச்சி
கிளையில் பணியாற்றுபவரான தோழர்   சுரேஷ்குமார் அவர்கள்
தேர்வாகியுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, 22 April 2018

கிரிமினல் பொதுமேலாளர் ஆதேஷ்குமார் குப்தா CBI யால்
கைது செய்யப்பட்டார்.

 ஆதேஷ்குமார் குப்தா பொதுமேலாளர் பரிதாபாத் CBI யால்
கைது செய்யப்பட்டார்.இவர்தான் காசியாத்தின் பொதுமேலாளராக‌
இருந்தபோது நமது மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால்சிங்
அவர்கள் கொலையில் சம்மந்தப்பட்டவர்.
அதேபோல் நொய்டாவின் பொதுமேலாளராக இருந்த போதும்
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் 
மேலிட செல்வாக்கோடு வெளியில் வந்தார். தற்போது
CBI யால்கைது செய்யப்பட்டுள்ளார்.
                                                       GPF   பட்டுவாடா

INTEREST CALCULATION நடந்து கொண்டிருப்பதால் GPF   26ந் தேதி 
பட்டுவாடா ஆகும்.

Wednesday, 18 April 2018


8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்க முடிவுகள்

அனைத்து மத்திய பொதுதுறை நிறுவன தொழிற்சங்கங்களின் சார்பாக‌
.8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நமது பொதுசெயலர்
தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்
அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நாடு முழுவதும் அனைத்து பொதுதுறை நிறுவனங்களிலும் பிரச்சாரம்
செயவது
2)பிரதம மந்திரி மற்றும் கனரக மந்திரிக்கு FAX அனுப்புவது
3)அ) தனியார்மயம் ஆ) ஊதிய திருத்தம் இ) FIXED EMPLOYMENT இது சம்மந்தமாக‌
விவாதிக்க புதுடெல்லியில் மே 25 ந் தேதி கருத்தரங்கம் நடத்துவது.

Tuesday, 10 April 2018

  12/4/2018   அன்று நடைபெற்ற  தர்ணா


 
 
 

                                                  12/4/2018   தர்ணா

துணைடவர் கம்பெனி செயல்படுத்த துவங்குவதை எதிர்த்து 
12/4/18 அன்று நாடு முழுவதும் ALL UNIONS AND ASSOCIATIONS 
சார்பாக தர்ணா நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில்
அனைத்து கிளைகளிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Wednesday, 4 April 2018

                                           அடுத்த அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு கர்நாடகா மாநிலம்
மைசூரில் 2019 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது

Saturday, 31 March 2018

                    UNION BANK க்கான கடன் திட்டம் நீட்டிப்பு

UNION BANK க்கான கடன் திட்டம் 31/12/2017 வுடன் முடிந்துவிட்டது
இதை நீட்டிக்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து
கேட்டு வந்தோம். அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
1/1/2018 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்.

                                   நிறுவனம் காக்க மீண்டும் போராட்டம்

நம்முடைய எதிர்ப்பையும் மீறி துணைடவர் கம்பெனி 1/4/2018 முதல்
செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ஆகவே இதை கண்டித்து
27/3/18 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், இதனை
தொடர்ந்து BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,BSNLATM.AIGETOA,BSNLOA,FNTO.
SEWABSNL,BSNLMS ஆகிய சங்கங்கள் இணைந்து DOT க்கு மெமோரண்டம்
கொடுத்துள்ளனர். துணைடவர் கம்பெனி செயல்படுத்தும் முயற்சியை
உடனடியாக கைவிட வேண்டும்.இதை வலியுறுத்தி கீழ்கண்ட 
இயக்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை நமது மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டுமென‌
கேட்டுக்கொள்கிறோம்.
1) 12-4-2018     தர்ணா 

2) இயக்குனர் குழுவில் ஒப்புதல் அளித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

3)19/4/2018 அன்று கவர்னரிடம் மனு கொடுப்பது.

Friday, 30 March 2018

                                                   வாழ்த்துக்கள்

மார்ச் மாதம் செல் இணைப்புக்கள் தமிழ்நாட்டில் 10 லட்சம் இணைப்புகளுக்கு
மேல் கொடுத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு லட்சத்து
இருபதாயிரத்திற்கு மேல் செல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் 
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.