ஜுலை 1 முதல் IDA 1.9% உயர்ந்துள்ளது . மொத்தம் 119 %
NFTE கூட்டணியின் போராட்டத்திற்கு BSNLEU ஆதரவு ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணி சங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் ஜுலை 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெறவுள்ளது .அதற்கு BSNLEU தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
BSNL ஊழியர்சங்கம் கண்டனம்
AIRINDIA நிறுவனத்தை தனியார்மயப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. திட்டமிட்டு அந்த நிறுவனத்தை சீர்குலைத்து தற்போது தனியார்மயப்ப்டுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு BSNL ஊழியர்சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஒன்று திரள்கின்றனர்.
அனைத்துசங்கங்களீன் சார்பாக தேசிய கருத்தரங்கம் புதுடெல்லியில் வருகிற ஆகஸ்ட்மாதம் 8 ந் தேதி நடைபெறுகிறது
27/6/2017 1/7/2017 முதல் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள ஒத்துழைப்பை விலக்கிகொள்வது
நமது நியாயமான போராட்டங்களூக்கு தடைவிதிக்கும் நிர்வாகத்தை கண்டித்து நிர்வாகத்திற்கு கொடுத்துவந்த ஒத்துழைப்பை விலக்கிகொள்வது என்று அனைத்துசங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது, ஊழியர்கள் அதிகாரிகள் தங்களூடைய பணியைதவிர இதரபணிகளில் ஈடுபடவேண்டாம் போராடிபெற்ற உரிமைகளை தடுப்பதை ஏற்கமுடியாது ஒன்றுபடுவோம்|| போராடுவோம்|| தடைகளை உடைப்போம்
23/6/17 நமது மத்தியசங்க தலைவர்கள் பொதுசெயலர் உள்பட CMD ஐ சந்தித்து HR DEPT லிருந்து வெளியிட்டுள்ள கடிதங்களை காண்பித்து தலையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அவரும் தலையிடுவதாக் ஒப்புதல் அளித்துள்ளார்.
Wednesday, 28 June 2017
23/6/2017தொழிற்சங்கங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை நிறுத்து நிர்வாகத்திற்கு நமது சங்கம் கடிதம்
நிலைமை சரியாகவிட்டால் போராட்டங்கள் தவிர்க்கமுடியாது
Friday, 23 June 2017
22/6/2017 CMD க்கு கடிதம்
MANAGEMENT COMMITTEE ஒப்புதல் அளித்த மூன்று கோரிக்கைகளை BSNL BOARD ல் உடன்டியாக ஒப்புதல் பெற்று தரவேண்டும் என்று CMD க்கு பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார் 1) NONEXECUTIVE களூக்கு E1 சம்பளவிகிதம் அமுல்படுத்தவேண்டும் 2) விடுபட்ட கேடர்களுக்கு கூடுதல் ஒரு இன்கிரிமெண்ட் 3) கேசுவல் லேபர்களுக்கு கீராஜூவட்டி வழங்கவேண்டும்
Thursday, 22 June 2017
ஜெயம்கொண்டாம் துணைக்கோட்ட அதிகாரியின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 22-06-2017 அன்று ஜெயம்கொண்டாம் தொலைபேசி நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
Tuesday, 20 June 2017
20-6-2017 அன்று நடைப்பெற்ற மாபெரும் தர்ணா
Sunday, 18 June 2017
17/6/17 அமைச்சருக்கு கடிதம்
மூன்றாவது ஊதியகுழு BSNL ல் அமுல்படுத்த AFFORDABILITY CLAUSEஐ நீக்கவேண்டும் என்று HEAVY INDUSTRIES MINISTER திரு ஆனந்த்கீத் அவர்களூக்கு மத்தியசங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.நேரில் சந்தித்து பேசுவதற்கும் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
Friday, 16 June 2017
மாபெரும் தர்ணா - 20-6-2017
1) 1/1/2017 முதல் BSNL ஊழியர்களூக்கு ஊதியதிருத்தம் செய்யவேண்டும் 2)1/1/2017 முதல் ஓய்வுதிய மாற்றம் செய்யவேண்டும் 3)நேரடிநியமன் ஊழியர்களூக்கு 30 % ஓய்வூதியபலன்கள் வழங்கவேண்டும் 4)ஓய்வூதியபங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும் 5) BSNLல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் கார்ப்பரேட் உத்தரவை ரத்து செய். 20-6-2017 காலை 10.00 மணி முதல் PGM அலுவலகம் திருச்சி அனைவரும் பங்கேற்பீர்
தோழர் தபன்சென் MP CITU பொதுசெயலருக்கு நன்றி கடந்த வருடம் 2016ல் நிதிஅயோக் BSNL நிறுவனம் கேந்திரபங்கு விற்பனை செய்யப்படும் என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடுத்து ராஜ்யசபாவில் தோழர் தபன்சென் MP BSNL நிறுவனம் எப்படியெல்லாம் BSNL கடந்தகாலங்களீல் நசுக்கப்பட்டது தற்போது ஊழியர்களுடைய கடுமையான பணிகாரமாக நிலைமை மாறிகொண்டுவருகிறது,லாபத்தை நோக்கி பயணத்திக் கொண்டிருக்கிறது ஆகவே இதை கேந்திரபங்கு விற்பனையோ, செய்யகூடாது என்று வாதிட்டார். ஒருவருடம் கழித்து தற்போது தொலைதொடர்பு அமைச்சர் திரு மனோஜ்சின்ஹா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் BSNL ல் கேந்திரபங்கு விற்பனை செய்ய NITIAYOG பரிந்துரை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
BSNL ன் இயக்குனர்கள்அனைவரும் நமது துறை அமைச்சர் திரு,மனோஜ்சின்ஹாவை 16/6/17 அன்று சந்திக்கவுள்ளனர். BSNL ஊழியர்களூக்கு ஊதியதிருத்தம்,வேலைநிறுத்த நோட்ட்ஸ் உள்பட விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது