Sunday, 7 January 2018

                                            கண்டன ஆர்ப்பாட்டம்

டவர் கம்பெனிக்கு நம்முடைய எதிர்ப்பையும் மீறி CMD ஐ
நியமித்ததை எதிர்த்து 8/1/2018 ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமென தோழமையுடன் கேட்டுக்
கொள்கிறோம்.
                                                ஆதரவு ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்ததில் பங்கேற்றுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு
ஆதரவாக  8/1/2018 அன்று மத்திய,மாநில அரசு ஊழியர் சங்கங்கள்.வங்கி,
இன்சுரன்ஸ்,தொலைதொடர்பு ஆகிய சங்கங்களின் சார்பாக மன்னார்புரத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமாய்
தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, 5 January 2018

                                                          FLASH

நம்முடைய கடுமையான போராட்டத்தின் விளைவாக 
ஓப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்திற்காக ரூபாய் 14 கோடி கார்ப்பரேட்
அலுவலகம் தமிழ்மாநிலத்திற்கு ஓதுக்கீடு செய்துள்ளது.

Wednesday, 3 January 2018

                                             நியமனத்தை கண்டிக்கிறோம்

BSNL ல் உள்ள டவர்களை பிரித்து தனியாக துணைடவர் கம்பெனி
உருவாக்ககூடாது என்று டிசம்பர் 12,13 இரண்டு நாள் அனைத்து 
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் இணைந்து வேலைநிறுத்தம்
செய்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் டவர் கம்பெனிக்கு என்று
ஒரு IAS  அதிகாரியை   CMD நியமனம் செய்துள்ள தை நம்முடைய
சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இது சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை வருகிற 8/1/2018 அன்று 
நடைபெறவுள்ள அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
மூன்றாம் நாள் உண்ணாவிரத  போராட்டம் வெல்லட்டும்

ஓப்பந்த தொழிலாளர்களூக்கு நவம்பர்மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை
என்று கண்டித்தும்,உடனடியாக ஊதியம் வழங்ககோரியும் சென்னை மாநில‌
நிர்வாகம் முன்பு 2/1/18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.அவர்களூக்கு ஆதரவாக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
(கருர்,புதுக்கோட்டை.திருச்சி) நடைபெற்றுள்ளது.அதில் கலந்து கொண்ட‌
அனைத்து தோழர்களுக்கும் இரண்டு மாவட்டசங்கங்களின் சார்பாக 
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ள தோழர்களூக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
3-12-2018 அன்று திருச்சியில் ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌ வழங்கவேண்டுமென்றும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
புதுக்கோட்டைகிளையில்



Monday, 1 January 2018

                                                                வாழ்த்துகிறோம்

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை
வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌
வழங்கவேண்டுமென்றும், மாவட்டங்களில் பல்வேறு போராட்டம்
நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் மாநில நிர்வாக‌
அலுவலகம் முன்பு இன்று முதல் (2-1-2018) மாநிலநிர்வாகிகள்  
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

போராட்டம்  வெல்க|,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்

Wednesday, 13 December 2017

                                        நன்றி         நன்றி      நன்றி

நமது வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இரண்டு நாள்
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள்,
அதிகாரிகள், ஓப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நமது
நெஞ்சார்ந்த நன்றியினையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

BSNLEU DISTRICT UNION AND 
ALL UN IONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Friday, 8 December 2017

வெற்றிகரமாக்குவோம் வேலைநிறுத்தத்தை

டிசம்பர் 12,13 இரண்டுநாட்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளூக்காக‌
1.நமது உரிமைகளை பாதுகாக்ககூடிய ஊதியதிருத்தத்திற்காக‌
2.நமது நிறுவனத்தை பாதுகாக்ககூடியதுணை டவர் கம்பெனியை உருவாக்காதே
இது நமது வாழ்வா சாவா போராட்டம் ஆகவே அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம்
பங்கேற்போம் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

Thursday, 7 December 2017

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING




 
 
 
 
 

 
 
 


Wednesday, 6 December 2017

அனைத்து சங்கங்களின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினர்
மாண்புமிகு திரு N   சிவா  MP அவர்களீடம் நம்து கோரிக்கை
மனு 6/12/17 அன்று அளிக்கப்பட்டது.

  

 
 
 
 
 
 

Thursday, 30 November 2017

நாடாளூமன்ற உறுப்பினரை சந்தித்து மகஜர் அளிக்கப்பட்டது

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா) திரு T.ரத்தினவேல் MP
அவர்களிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக 29/11/2017 அன்று நமது
கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டது

 

Friday, 24 November 2017

                                         நன்றி  நன்றி   நன்றி

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து
நாடு முழுவதும் மனிதசங்கிலி இயக்கம் நடத்த வேண்டுமென்று
கூட்டுபோராட்டக்குழு அறிவித்ததின் அடிப்படையில் திருச்சியில்
23-11-2017 அன்று PGM அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதசங்கிலி
இயக்கத்தில் சுமார் 500 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஓப்பந்த‌
தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் ALL UNIONS AND ASSOCIATIONS சார்பாக‌
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் வருகிற டிசம்பர் 12,13 வேலைநிறுத்ததிலும் முழுமையாக‌
கலந்து கொண்டு வெற்றிபெறசெய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.