Wednesday, 3 January 2018

3-12-2018 அன்று திருச்சியில் ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌ வழங்கவேண்டுமென்றும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
புதுக்கோட்டைகிளையில்



Monday, 1 January 2018

                                                                வாழ்த்துகிறோம்

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுவரை
வழங்கப்படவில்லை அதை கண்டித்தும், ஊதியம் உடனடியாக‌
வழங்கவேண்டுமென்றும், மாவட்டங்களில் பல்வேறு போராட்டம்
நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் மாநில நிர்வாக‌
அலுவலகம் முன்பு இன்று முதல் (2-1-2018) மாநிலநிர்வாகிகள்  
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

போராட்டம்  வெல்க|,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்

Wednesday, 13 December 2017

                                        நன்றி         நன்றி      நன்றி

நமது வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இரண்டு நாள்
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள்,
அதிகாரிகள், ஓப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நமது
நெஞ்சார்ந்த நன்றியினையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

BSNLEU DISTRICT UNION AND 
ALL UN IONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Friday, 8 December 2017

வெற்றிகரமாக்குவோம் வேலைநிறுத்தத்தை

டிசம்பர் 12,13 இரண்டுநாட்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளூக்காக‌
1.நமது உரிமைகளை பாதுகாக்ககூடிய ஊதியதிருத்தத்திற்காக‌
2.நமது நிறுவனத்தை பாதுகாக்ககூடியதுணை டவர் கம்பெனியை உருவாக்காதே
இது நமது வாழ்வா சாவா போராட்டம் ஆகவே அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம்
பங்கேற்போம் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

Thursday, 7 December 2017

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING




 
 
 
 
 

 
 
 


Wednesday, 6 December 2017

அனைத்து சங்கங்களின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினர்
மாண்புமிகு திரு N   சிவா  MP அவர்களீடம் நம்து கோரிக்கை
மனு 6/12/17 அன்று அளிக்கப்பட்டது.

  

 
 
 
 
 
 

Thursday, 30 November 2017

நாடாளூமன்ற உறுப்பினரை சந்தித்து மகஜர் அளிக்கப்பட்டது

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா) திரு T.ரத்தினவேல் MP
அவர்களிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக 29/11/2017 அன்று நமது
கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டது

 

Friday, 24 November 2017

                                         நன்றி  நன்றி   நன்றி

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து
நாடு முழுவதும் மனிதசங்கிலி இயக்கம் நடத்த வேண்டுமென்று
கூட்டுபோராட்டக்குழு அறிவித்ததின் அடிப்படையில் திருச்சியில்
23-11-2017 அன்று PGM அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதசங்கிலி
இயக்கத்தில் சுமார் 500 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஓப்பந்த‌
தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் ALL UNIONS AND ASSOCIATIONS சார்பாக‌
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் வருகிற டிசம்பர் 12,13 வேலைநிறுத்ததிலும் முழுமையாக‌
கலந்து கொண்டு வெற்றிபெறசெய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, 19 November 2017

                     வேலைநிறுத்த கூட்டம் நமது மாவட்டத்தில்

அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்கண்ட இடங்களில் 
கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது.அனைத்து சங்க‌
தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL---BSNLMS
BSNLOA----BSNLATM----TEPU-----AIBSNLOA----BEABSNL

17/11/2017-----AUTO EXCHANGE   (நடைபெற்றுவிட்டது)

18/11/2017----D-TAX BUILDING   (நடைபெற்றுவிட்டது)

20/11/2017----PUDUKOTTAI

22/11/2017----KARUR

23/11/2017-----TRICHY PGM OFFICE  HUMANCHAIN மனிதசங்கலி இயக்கம்

24/11/2017----PERAMBALUR

25/11/2017----ARIYALUR

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING

Wednesday, 15 November 2017

                                              நன்றி  நன்றி நன்றி

நேற்று நடைபெற்ற தேசியகவுன்சில் கூட்டத்தில் ஊழியர்களுக்கு
தற்போது வழங்கி வருகின்ற ரூ 200 இலவச செல் கால்களுக்கு பதில்
தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள PLANT 429 திட்டத்தை
ஊழியர்களுக்கு வழங்கவேண்டுமென்று நமது பொதுசெயலர்
கோரிக்கைவைத்தார். கவுன்சிலின் தலைவர் DIRECTOR (HR) அதை
ஏற்றுக்கொண்டார். விரைவில் உத்தரவு வெளியாகும்.

இதன் மூலம் மூன்று மாதத்திற்கு எந்த NETWORK க்கும் UNLIMITED
பேசிக்கொள்ளலாம்.தினமும் 1 GB        DATA பயன்படுத்திக்கொள்ளலாம்

மத்தியசஙகத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday, 12 November 2017

கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்

மூன்று நாட்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்ட தர்ணா
புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தின்போது சிறைநிரப்பும் போராட்டமும்
அதற்கு அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது
என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Friday, 3 November 2017

                                       வாழ்த்தி வழி அனுப்புகிறோம்

மத்திய அரசின் தொழிலாளர்விரோத கொள்கைகளை எதிர்த்து
11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து 12 முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்து பல்வேறு இயக்கங்களுக்கு முடிவு செய்து அது
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக வருகிற‌
9,10,11 மூன்று நாட்கள் புதுடெல்லியில் பல லட்சம் பேர் கலந்து
கொள்ளக்கூடிய தர்ணா நடைபெறவுள்ளது. அதில் BSNLEU சார்பாக‌
நாடு முழுவதும் பல நூறு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்
திலிருந்து 150 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நமது மாவட்டத்திலிருந்து BSNLEU   சார்பாக 8 பேரும்  AIBDPA சார்பாக 2
பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்
அவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்