Wednesday 27 September 2017

வெற்றி  ! மாபெரும் வெற்றி

ஈரோட்டில் நஷ்டம் எனற காரணத்தை காட்டி 10 வருடங்களூக்கும்
மேலாக பணீயாற்றியவர்களை 1/9/2017 முதல் பணிநீக்கம் செய்தது
நமது மாவட்டசங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித‌
முன்னேற்றமும் இல்லை.பல கட்ட போராட்டமும் நடத்திவிட்டார்கள்
நிர்வாகம் அசைய மறுத்தது.ஆகவே வேறுவழியின்றி இரண்டு மாநில‌
சங்கங்கள் அறைகூவல்விட்டதின் அடிப்படையில் தமிழ்மாநில‌
முழுவதிலிருமிருந்து 800 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அத்தனைபேரையும் மீண்டும்
பணீக்கு எடுத்துக் கொள்வது என்ற உடன்பாடு ஏற்பட்டது.
வேலுரில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
சென்னை CGM அலுவலகத்தில் 11 பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
தற்போது ஈரோட்டில் அதை செய்து முடித்துள்ளோம்.
ஓப்பந்த தொழிலாளர்கள் ஓன்றும் அனாதைகளல்ல அவர்க்ளுக்கு BSNL ஊழியர்
சங்கமும் ,ஓப்பந்த தொழிலாளர் சங்கமும் பாதுகாவலனாக இருக்கும் என்பதை
மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளோம்.
போரடாமல் பெற்றதில்லை! போராடி நாம் தோற்றதில்லை! இறுதி வெற்றி நம‌தே!

No comments:

Post a Comment