Wednesday, 22 August 2018


                   நன்றி| நன்றி| நன்றி|



கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த மா நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி வழங்கவேண்டுமென்று அனைவரிடமும் கேட்டோம். அந்த வகையில்
நன்கொடை அளித்துள்ளார்கள்
PGM OFFICE             RS 11805-
AUTOEXGE               RS 1750
KARUR                 RS 8700
ARIYALUR              RS 1800
CANT TR              RS 1700
                   ________________
TOTAL               RS 25755
                  _______________________
நன்கொடை அளித்த அனைவருக்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.       


Friday, 17 August 2018

                               கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் பிரதமர் ,பாரதரத்னா விருதுபெற்றவரும் ,கவிஞருமான திரு
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்
காலமாகிவிட்டார் என்பதை கேட்டு வருத்தம் அடைந்தோம்.
அன்னாரது பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Tuesday, 14 August 2018

                                              நன்றி| நன்றி| நன்றி|
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடை
வழங்கவேண்டும் என்று கேட்டோம் ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்த தொழிலாளர்கள் ரு 11605/- கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, 12 August 2018

                                   கேரளத்திற்கு உதவிடுவோம்

கடந்த 5 நாட்களுக்காக பெய்யும் கடும் மழையால் கேரளாவிலுள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் வீடிழந்து பொருட்களை இழந்து
தவிக்கின்றனர். கேரள அரசாங்கம் போர்கால நடவடிகையை மேற்கொண்டுள்ளது. இருந்தும் நாமும்
நம்முடைய உதவியை செய்யும் வகையில் நன்கொடை வசூலித்து அனுப்புவோம்.ஆகவே தோழர்கள் தாராளமாக  நிதிஉதவி அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Tuesday, 7 August 2018

                                    கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் முதல்வர்,போராளி,பன்முகதன்மை கொண்ட டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் மறைவிற்கு நம்முடைய ஆழ் ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday, 5 August 2018

                                              வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் 5வது மாவட்டமாநாடு திருவெறும்பூர் 
5/8/18 அன்று நடைபெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழர் G  சுந்தராஜீ மாவட்டதலைவராகவும் தோழர் முபாரம் மாவட்டசெயராகவும் தோழர் A சண்முகம் மாவட்டபொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அவர்களூக்கு நமக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 30 July 2018

                                                   வாழ்த்துகிறோம்

மது முதன்மை பொதுமேலாளர்
திரு V.  ராஜூ அவர்கள் தமிழ்நாடு சர்க்கிளின் தலைமை பொதுமேலாளராக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday, 29 July 2018

                                           நன்றி  நன்றி  நன்றி
 நமது துறை அமைச்சரோடு 24/2/18 நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை/உறுதிமொழிகளை அமுல்படுத்த வேண்டுமென்று 24/7/18 அன்று திருச்சியிலும்,25/7/18 அன்று புதுகோட்டையிலும்,26/7/18 அன்று கரூரிலும் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

Saturday, 28 July 2018

நன்றி! நன்றி! நன்றி! 24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB தலைவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை அமலாக்க வலியுறுத்தி ஜூலை 24 முதல் 26வரை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் BSNLEU சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 20 July 2018

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் மாநில மா நாடு பாண்டிச்சேரியில் 15/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது மாவட்டத்திலிருந்து 5 தோழியர்கள் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழியர்
மல்லிகா மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்களூக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொண்ட நமது
தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்

 ஊதிய திருத்த பேச்சுவார்த்தை குழுவின் முதல் கூட்டம் 20/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது சங்கத்திலிருந்து 5 பேரும் NFTE  3 பேரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்தி விரைவில் ஊதிய திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நமது பொதுசெயலர் வலியுறுத்தினார்.  நிர்வாகமும் அதை ஏற்றுக்கொண்டது.அடுத்த கூட்டம் 9/8/18 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இரண்டு சங்கங்களும் இணைந்து ஊதியதிருத்தத்திற்கான முன்மொழிவை
கொடுப்பது.அதற்கான கூட்டம் 3/8/18 அன்று  நடைபெறும்.

Monday, 9 July 2018

ஊதிய கூட்டுக்குழு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்குக‌

3வது ஊதியதிருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை துவங்கலாம்
என்று DOT  உத்தரவிட்டபின்  நிர்வாகம் தரப்பில் 5 பேரும்
BSNLEU  சார்பாக 3 பேரும் NFTE  சார்பாக 2 பேரும் பெயர்
கொடுக்கவேண்டுமென்று நிர்வாகம் கடிதம் கொடுத்தது. உடனடியாக‌
நமது பொதுசெயலர் ஊழியர் தரப்பில் இன்னும் கூடுதலான உறுப்பினர்கள்
நியமிப்பதற்கு பரிசிலனை செய்ய வேண்டுமென்று கடிதம் கொடுக்கப்பட்டது
அதனடிப்படையில் தற்போது நிர்வாகம் BSNLEU     5 பேரும்   
 NFTE   3 பேரும் பெயர் கொடுக்கலாம் என்று சங்கங்களூக்கு கடிதம்
கொடுத்தது.அதனடிப்படையில் நமது சங்கத்திலிருந்து பெயர்கள் கொடுக்கப்பட்டு
விட்டது.நேற்றைய தினம்  (9/7/18) GM SR அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
குழுவை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை துவங்கவேண்டுமென்று கேட்டுள்ளது.